ஷூட்டிங்கில் திட்டிய சிறுத்தை சிவா!! நடிகை திரிஷா கொடுத்த ரியாக்ஷன்!! நடிகர் ஸ்ரீகாந்த்...
மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்து கொடிக்கட்டி பறந்த நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டம் பெற்ற திரிஷா ஜோடி படத்தில் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்து பின் மெளனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அதன்பின் டாப் நடிகையாக வளர்ந்து வந்தப்பின் பல பிரச்சனைகளை சந்தித்து சினிமாவில் மார்க்கெட்டை இழந்து வந்தார். பின் 96, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் திரிஷா பற்றி சில தகவலை அவருடன் நடித்த நடிகர் ஸ்ரீகாந்த் பகிர்ந்துள்ளார். திரிஷாவை எனக்கு சினிமாவில் மனசெல்லாம் படத்திற்கு அறிமுகமாவதற்கு முன்பே தெரியும். இருவரும் 25, 20 ஷோக்களை ஒன்றாக செய்திருக்கிறோம்.
திரிஷா கிட்ட பிடித்த விஷயம், இன்னைக்கு அவர் வயசு என்னன்னு பாருங்க, அன்னைக்கு எப்படி இருந்தாங்களோ இன்னைக்கும் அப்படிதான் இருக்காங்க. தன்னை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் இந்த சினிமாத்துறையில் என்பதற்கு உதாரணமே திரிஷா தான். திரிஷாவுக்கு தமிழ் சரியா வராத.
டயலாக்கை தப்புத்தப்பா பேசுவாங்க, எப்பவும் ஃபோனில் தான் இருப்பாங்க. மனசெல்லாம் படத்திற்கு கேமரா மேனாக சிறுத்தை சிவா பணியாற்றினார். அப்போது அவர் திரிஷாவிடம் சண்டை போட்டார். ஒரு ஹீரோ அழுதுகிட்டு, ராத்திரி தூங்காமல் இருக்கான் நீ என்ன ஃபோனில் மெசேஜ் பண்ணிட்டு இருக்க என்று திட்டியபோது, அதற்கு நடிகை திரிஷா, ஓகே கூல் கூல் என்று சாதாரணமாக பதிலளித்தார் என்று நடிகர் ஸ்ரீகாந்த் பேட்டியில் கூறியிருக்கிறார்..
![Gallery](https://cdn.ibcstack.com/article/dcd629e1-f989-4e3a-9276-140a0a0124f2/24-6683db0f0bd3f.webp)