காசா? படமா!! தயாரிப்பாளர் போட்ட கண்டீசன்!! காசு வாங்காமல் சிவகார்த்திகேயன் செய்த செயல்..
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படத்திற்கு பின் அயலான் படம் வருகிற பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. 2016ல் ஆரம்பிக்கப்பட்ட அயலான் படத்தினை இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் கேஜேஆர் ஸ்டுடியோ ராஜேஷ் தயாரிப்பில் இப்படம் பல கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. சமீபத்தில் அயலான் படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்துள்ள சிவகார்த்திகேயன், இப்படத்திற்காக சம்பளம் வாங்காமல் இருந்ததை பகிர்ந்துள்ளார்.
சம்பளமா? படம் வெளியில வரணுமா? என்ற கேள்வியா இருந்தது. இது ஒரு விஷன், நம்ம ஊரில், நம்மால் இப்படியொரு பட்ஜெட்டில் படம் பண்ண முடியும், என்பதை வைத்து தான் ஆரம்பித்தோம்.
இந்த படம் பான் இந்தியா என்ற வார்த்தை இல்லை, அதன்பின் தான் பாகுபலி போன்ற படங்கள் வந்தது. தயாரிப்பாளருக்கு நிறைய சிக்கல்கள் வந்ததால் சம்பளம் வேண்டாம் என்று கூறி, படத்தை வெளியிட்டால் போதும் என்று முடிவெடுத்ததாக சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.