வயிற்று வலின்னு சொன்ன சூர்யா.. பீரியட்ஸானு கேட்ட பாலா!! வணங்கான் பஞ்சாயத்துக்கு காரணமே இதான்..
நடிகர் சூர்யா பல ஆண்டுகள் கழித்து இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகி தானே தயாரித்து செலவு செய்து பாதி படத்தினை முடிந்தார். ஆனால் இரண்டு செட்யூல்கள் முடிந்த நிலையில் என்ன காரணம் என்று தெரியாமல் படத்தில் இருந்து விலகிவிட்டார் சூர்யா.
இதற்கு காரணம் பலர் பலவிதமாக கூறி வந்த நிலையில், பத்திரிக்கையாளர் சுபைர் முக்கிய பிரச்சனை என்ன என்பதை பகிர்ந்திருக்கிறார். இன்றைய எதார்த்ததை புரிந்து கொள்ளாத பாலா, சூர்யாவை நந்தா பட சூர்யா என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்.
ஆரம்பத்தில் சூர்யாவை ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓட வைத்து கொண்டே இருந்தது தான் பிரச்சனை என்றார்கள். ஆனால் இன்றும் ஒரு பிரச்சனை என்று கூறுகிறார்கள். அதாவது ஷூட்டிங்கில் சூர்யா, தனக்கு வயிற்று வலி என்று கூறியிருக்கிறார். அதற்கு பாலா, ஏன் பீரியட்ஸா என்று கேட்டுவிட்டாராம்.
இதனால் தான் சூர்யா பாலாவிடம் இருந்து ஒதுங்க முடிவெடுத்தாராம். அதன்பின் சூர்யா விலக, நடிகர் அருண் விஜய்யை வைத்து படம் எடுத்து வருகிறார் பாலா. படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தும் இன்னும் படத்தின் வேலைகள் தாமதமாகி வருவது குறிப்பிடத்தக்கது.