ஆர்த்தி கூட இத்தனை வருஷம் வாழ்ந்ததே பெருசு!! ஜெயம் ரவி விவாகரத்தில் மூக்கை நுழைத்த பாடகி சுசித்ரா..

Jayam Ravi Gossip Today Suchitra Divorce
By Edward Jun 29, 2024 10:30 PM GMT
Edward

Edward

Report

சினிமா பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் அடுத்தடுத்து வந்து கொண்டு இருக்கிறது. எந்த நாளில் எந்த பிரபலங்கள் விவாகரத்து அறிவிப்பார்கள் என்பது கூட தெரியவில்லை. அந்த அளவுக்கு விவாகரத்து தகவல் வருகிறது. இந்த லிஸ்டில் புதிதாக இணைந்துள்ளனர், ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியினர். சில பத்திரிக்கைகளில் ஜெயம் ரவி - ஆர்த்திக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது என்றும் விரைவில் விவாகரத்து தொடர்பான தகவலை அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஆர்த்தி கூட இத்தனை வருஷம் வாழ்ந்ததே பெருசு!! ஜெயம் ரவி விவாகரத்தில் மூக்கை நுழைத்த பாடகி சுசித்ரா.. | Suchitra Shocking Details About Jayam Ravi Aarti

சிலர், இது போன்ற செய்திகள் உண்மை இல்லை, வெறும் வதந்தியே என்று சொல்கின்றனர். அதிலும் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, கணவருடன் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டுள்ளார்.

இப்படியொரு சூழலில் ஜெயம் ரவிக்கு, ஆர்த்தியின் தாயார் சுஜாதா சங்கர் என்பவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவர் கொடுத்த பிரச்சனையால் தான் ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் பிரச்சனை ஆரம்பித்ததாக பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் தெரிவித்திருந்தார்.

ஆர்த்தி கூட இத்தனை வருஷம் வாழ்ந்ததே பெருசு!! ஜெயம் ரவி விவாகரத்தில் மூக்கை நுழைத்த பாடகி சுசித்ரா.. | Suchitra Shocking Details About Jayam Ravi Aarti

இந்நிலையில் பிரபல பாடகியும் சர்ச்சை பிரபலமுமான சுசித்ரா, ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து விஷயம் பற்றி பகிர்ந்துள்ளார். இவர்களின் விவாகரத்தில் என் ஆதரவு ஜெயம் ரவிக்கு தான் என்றும் ஆர்த்தி கூட எல்லாம் வாழவே முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆடம்பரமான பெண், அப்படியிருக்கும் போது ஜெயம் ரவி நைட் அண்ட் டே வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படியே வீட்டிற்கு சென்றாலும் ஆர்த்தி என்னை மனநிலையில் இருப்பார் என்றே சொல்லமுடியாது. ஏதோ அவர் அழகாக இருந்ததால் அவருடன் வாழ்ந்துவிட்டார்.

ஆர்த்தி கூட இத்தனை வருஷம் வாழ்ந்ததே பெருசு!! ஜெயம் ரவி விவாகரத்தில் மூக்கை நுழைத்த பாடகி சுசித்ரா.. | Suchitra Shocking Details About Jayam Ravi Aarti

அழகு எத்தனை நாளைக்கு இருக்கும். ஜெயம் ரவி குடும்பம் மற்றவர்களை போல் இல்லாமல் கஷ்டப்பட்டு சினிமாவில் முன்னுக்கு வந்தவர்கள். அவர்களின் குடும்பம் மற்றவர்களை எப்போது மதிப்பவர்கள் என்று சுசித்ரா தெரிவித்துள்ளார்.