நக்மா தான் வேண்டும் என்று அடம்பிடித்த தயாரிப்பாளர்!! ஓட்டுமொத்த ஸ்கிரிப்டை சொதப்பிய இயக்குனர்..

Karthik Sundar C Nagma Rambha Tamannaah
By Edward May 03, 2024 06:30 AM GMT
Report

முன்னணி இயக்குனராக இருக்கும் இயக்குனர் சுந்தர் சி, சமீபகாலமாக அரண்மனை மற்றும் இருட்டு போன்ற படங்களில் நடிகராகவும் நடித்து அனைவரையும் கவர்ந்து வருகிறார். தற்போது அரண்மனை 4 படத்தினை இயக்கி இன்று படம் வெளியாகியிருக்கிறது. அரண்மனை 4 படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வரும் சுந்தர் சி, சில சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

நக்மா தான் வேண்டும் என்று அடம்பிடித்த தயாரிப்பாளர்!! ஓட்டுமொத்த ஸ்கிரிப்டை சொதப்பிய இயக்குனர்.. | Sundar C Open About Nagma Reason Ullathai Allitha

அந்தவகையில் உள்ளத்தை அள்ளித்தா படம் உருவான விதம் எப்படி என்று கூறியிருக்கிறார். உள்ளத்தை அளித்தா உருவாக காரணம் நடிகை நக்மா தான். படத்தின் தயாரிப்பாளர், என்னவோ தெரியல நக்மா தான் வேண்டும் என்று அடம்பிடித்தார். கதை என்ன என்று கூட பார்க்காமல் நக்மா தான் வேண்டும் என்று இருந்தார். நான் வந்து கலைப்படைப்பு பண்ண வந்தோம், முறைமாமன் என்ற கிராமத்து படம் பண்ணேன்.

நக்மா தான் வேண்டும் என்று அடம்பிடித்த தயாரிப்பாளர்!! ஓட்டுமொத்த ஸ்கிரிப்டை சொதப்பிய இயக்குனர்.. | Sundar C Open About Nagma Reason Ullathai Allitha

நான் வாழ்க்கையில் அப்போது கிராமத்துக்கே போனதில்லை, நான் கோயம்புத்தூர் சிட்டில இருந்தேன். சினிமாவுக்காக கிராமத்து படம் எடுத்தேன். இரண்டாம் படமாவது நமக்கு பிடித்த படம் எடுக்கணும் என்று நினைத்திருந்தேன். புருஷன் பொண்டாட்டி விவாகரத்து பற்றிய கதையை பண்ணி வைத்திருந்தேன்.

தயாரிப்பாளர், நக்மா தான் ஹீரோயின் என்று தேர்வு செய்துவிட்டார். இளையராஜா இசைக்குழுவில், வயலின் வாசிக்கும் ஹீரோயின், கோரஸ் பாடுற ஹீரோ, இதுதான் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் கதை.

நக்மா தான் வேண்டும் என்று அடம்பிடித்த தயாரிப்பாளர்!! ஓட்டுமொத்த ஸ்கிரிப்டை சொதப்பிய இயக்குனர்.. | Sundar C Open About Nagma Reason Ullathai Allitha

நக்மா ஹீரோயின் என்பதால் இளையராஜா குரூப்பில் வயலின் வாசிக்கும் பெண் என்று எடுத்தால் மோசமாக இருக்கும் என்பதால், நக்மா பெரிய இடத்து பெண், ஹீரோ கார் டிரைவர் என்று மாற்றினேன். ஒரிஜினல் கதை போய் அப்படியே கதை மாறி உள்ளத்தை அள்ளித்தா படமாக மாறியது என்று சுந்தர் சி ஓப்பனாக பேசியிருக்கிறார்.