குஷ்பூவை பார்க்காமல் இருந்தால் அந்த நடிகைதான் என் மனைவி.. பல ஆண்டு உண்மை உடைத்த சுந்தர் சி..

Kushboo Tamilactress Sundarc
By Edward Oct 25, 2021 07:30 AM GMT
Edward

Edward

Report
111 Shares

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர், விருது இயக்குனர் என பல தங்களுக்கென படத்தின் பாவனையை கொண்டு வெளியிட்டு வருவார்கள். அப்படி சமீபத்தில் பேய் கதையை மையமாக எடுத்து நல்ல வரவேற்பை பெற்று வருபவர் சுந்தர் சி. ஆரம்பத்தில் காமர்ஷியல் கதைகளை எடுத்து வந்த சுந்தர் சி தற்போது அரண்மனை 3 யை வெளியிட்டார்.

அதன் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக பேட்டியும் கொடுத்து வருகிறார். அந்த வகையில், குஷ்பூ பெட்டியொன்றில் சுந்தர் சி எந்த ஹீரோயினை வைத்து வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் ஆனால் சௌந்தர்யாவை வைத்து எடுக்க கூடாது என்று கூறினார்.

அது பற்றி பத்திரிக்கையாளர் ஒருவர் சுந்தர் சியிடம்  கேட்டார். அதற்கு பதிலளித்த சுந்தர் சி, சௌந்தர்யா மிகவும் திறமையான மற்றும் அழகான நடிகை. அவர் என்னுடைய அருணாச்சலம் படத்தில் பணிபுரிந்தார். மிகவும் அற்புதமாக நடிக்கக் கூடியவர்,  அருமையான மனிதரும் கூட என்று புகழ்ந்துள்ளார்.

குஷ்பு என் வாழ்வில் வராமல் இருந்திருந்தால் நான் சௌந்தர்யாவிடம் ப்ரபோஸ் செய்திருப்பேன் என்று ஜாலியாக கூறியுள்ளார்.

நான் இப்பொழுதும் குஷ்புவிடம், ஒருவேளை நான் சௌந்தர்யாவிடம் ப்ரபோஸ் செய்து அதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் அவர்கள் தற்போது உயிருடன் இருந்திருப்பார்கள் என்று அடிக்கடி கூறுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சௌந்தர்யா நடிக்க வரும் பொழுது அவருக்கு துணையாக சௌந்தர்யாவின் அண்ணன் எப்பொழுதும் கூடவே இருப்பார். எதிர்பாராத விதமாக இருவரும் விபத்தில் இறந்துவிட்டனர் என்று உருக்கமாக கூறியுள்ளார்.