தீவிர சிகிச்சையில் சீரியஸா? வதந்தி செய்தியை பார்த்து ஷாக்கான சீரியல் நடிகை கேப்ரில்லா செல்லஸ்..
சமுகவலைத்தளங்கள் மூலம் பலர் பிரபலங்களாக மாறி சினிமா வாய்ப்பினை பெற்று வருகிறார்கள். அந்தவகையில், சமுகத்தில் பெண்களை பற்றிய கருத்துகளை எடுத்துக்காட்டி யுடியூப் சேனலில் கொடிக்கட்டி பறந்து பிரபலமானவர் கேப்ரில்லா செல்லஸ்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் காலெடி எடுத்து வைத்து ஒருசிலபடங்களில் சிறு கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். யுடியூப்பில் கிடைத்த வரவேற்பால் சின்னத்திரை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கருப்பாக இருக்கும் கேப்ரில்லா செல்லஸ் பல குறுப்படங்களில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றி கலக்கி வருகிறார்.
டிக்டாக் செயலி மூலம் தன் பிம்பத்தையும் காட்டிய கேப்ரில்லா பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகும் சுந்தரி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலில் பிஸியாக இருந்த கேப்ரில்லா, மே முதல் வாரத்தில் இரண்டு ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதியானது.
தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கூறி இணையத்தில் ரசிகர்களுக்கு தெரிவித்தார். தெரிவித்த சில நாட்களில் கேப்ரில்லா தீவிர சிகிச்சை பெற்றும் சீரியஸாகவும் இருக்கிறார் என்று கூறி செய்திகள் வெளியானது. ஆனால், அப்படியெல்லாம் சொல்லாதீங்க, நான் நல்லா தான் இருக்கேன் என்று பதறிப்போய் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நன்றாக இருக்கும் போது தன்னை பற்றி அதுவும் சீரியஸாக இருப்பது போன்று வதந்திகள் பரவுவது கேட்டேன். அதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பாசிட்டிவ் வந்ததும் என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். ஆனால் வதந்தி செய்திகள் போன்று எனக்கு அப்படியெல்லாம் ஆகவில்லை என்று லைவ் பேட்டியொன்றில் விவரமாக கூறியுள்ளார்.