இப்படி நடக்கும்னு நினைக்கல..2 மணி நேரமா!! சூப்பர் சிங்கர் 10 டைட்டில் வின்னர் காயத்ரி உருக்கம்...

Super Singer Star Vijay Tamil Singers
By Edward Jun 05, 2025 11:38 AM GMT
Report

சூப்பர் சிங்கர் 10

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிதான் சூப்பர் சிங்கர்.

சமீபத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சி கிராண்ட் பினாலேவுடன் நிறைவு பெற்றது. டைட்டில் வின்னராக காயத்ரி தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்நிகழ்ச்சிக்கு பின் காயத்ரி பல மீடியாக்களுக்கு பேட்டிகள் கொடுத்து, பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

இப்படி நடக்கும்னு நினைக்கல..2 மணி நேரமா!! சூப்பர் சிங்கர் 10 டைட்டில் வின்னர் காயத்ரி உருக்கம்... | Super Singer Junior 10 Winner Gayathri Emotional

டைட்டில் வின்னர் காயத்ரி

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ஃபைனலிஸ்ட் ஆக முதலில் தேர்வு செய்யப்படாமல் இருந்தது குறித்து பேசியுள்ளார். எனக்கு அந்த கப் அடிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை, ஜாலியா பாட வேண்டும் என்று தான் இருந்தது.

ஒருமுறை மட்டும் எனக்கு கோல்டன் ஷவர் கிடைக்கவில்லை என்று அழுதேன். நான் தான் ஃபைனலிஸ்ட் ஆவேன் என்று போனேன், ஆனால் ஒரு சின்ன தவறால் எனக்கு கோல்டன் ஷவர் கிடைக்கவில்லை, அதற்காக நான் 2 மணி நேரம் அழுதேன்.

ஒரு பாட்டி எனக்கு யாரு என்றே தெரியாது, இதற்காக எல்லாம் அழுகாத, நான் உனக்காக மொட்டை அடிக்கிறேன் என்று சொன்னார்கள். அதன்பின் நான் அதை செய்யவில்லை என்று டைட்டில் வின்னர் காயத்ரி தெரிவித்துள்ளர்.