விராட் கோலி உயிருக்கு ஆபத்து.. RCB பயிற்சி ரத்து!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..
Virat Kohli
Cricket
Indian Cricket Team
International Cricket Council
By Dhiviyarajan
கிரிக்கெட்டில் முன்னணி வீரராக இருந்து வருபவர் விராட் கோலி. தற்போது இவர் IPL லில் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் மண்ணை கவ்விய RCB அணி, கடைசியில் CSK அணியை வீழ்த்தி பிளே ஆப்க்கு நுழைந்துவிட்டது.
இன்று RCB மற்றும் RR இடையே அகமதாபாத்தில் போட்டி நடைபெற உள்ளது, இந்த நிலையில் RCB வீரர் விராட் கோலிக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் என்றும் அவர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று குஜராத் போலீசார் கூறியுள்ளனர்.
இதனால் இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருந்த பயிற்சியை RCB அணி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.