அஜித்தை தூக்கிவிட்டு தெலுங்கு நடிகரை புக் செய்த பெண் இயக்குநர்! இதுதான் காரணமாம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித் குமார். பல லட்ச ரசிகர்கள் தல என்று அழைக்கப்பட்டு சமீபத்தில் எந்த கொண்டாட்டம் இல்லாமல் பிறந்த நாளை கொண்டாடினார்.
ரசிகர்களின் ஏக்கங்களை கண்டு கொள்ளாத தல அஜித் வலிமை படத்தின் அப்டேட் எப்போது அறிவிப்பார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. பல இடத்தில் இப்படியான கேள்விகள் எழுந்த நிலையில், அஜித்தை வைத்து பல இயக்குநர்கள் வரிசை கட்டி கதை சொல்லும் தருணத்தில், சூரரைப் போற்று படத்தை பார்த்துவிட்டு சுதா கொங்கராவை அழைத்து அவரிடம் கதை கேட்டு ஓகே செய்து விட்டாராம்.
ஆனால் தற்போது வினோத் படத்திற்கு பிறகுதான் சுதா கொங்கராவின் படம் வரும் என தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக தற்போது அஜித்தை மட்டும் நம்பினால் வேலைக்கு ஆகாது என தன்னுடைய கதையை வேறு ஒருவரிடம் சொல்லி ஓகே வாங்கி விட்டாராம்.
அவர் வேறு யாரும் இல்லை. நம்ம பாகுபலி பிரபாஸ் தான். சுதா கொங்கரா சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும், விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது எனவும் செய்திகள் வந்துள்ளன.
தற்போது பிரபாஸ் நடிப்பில் ராதே ஷ்யாம், ஆதி புருஷ், சலார் போன்ற படங்களில் நடிப்பதால் இந்த படத்தை தூக்கி எறிந்துவிடுவார் என் கூறப்படுகிறது. இதுபற்றி பல பயில்வான் நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.