தளபதி கூறிய ஒரு வார்த்தை! இனிமேல் விஜய் படத்தில் பாட மாட்டேன்! எஸ்பிபி கூறியதற்கு இதுதான் காரணமா?
இந்திய சினிமாவின் பெரிய லிஜெண்ட்டரி பாடகர் என்று அழைக்கபடுபவர் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்தியா முழுவதும் சுமார் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பல மொழிகளில் பாடி கின்னஸ் சாதனை படைத்தவர். மேலும் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட பல தேசிய விருதுகளையும் பெற்றவர் எஸ்பிபி.
அப்படிபட்ட பாடகர் இந்திய முன்னணி நடிகர்கள் படத்தில் பாடிய எஸ்பிபி பிரியமான தோழி படத்திற்கு பிறகு நடிகர் விஜய் படத்தில் பாடுவதை நிறுத்தினாராம். இசையில் அதிக அக்கறை கொண்ட விஜய் ஒரே வார்த்தை கூறியதுதான் அதற்கு காரணமாம். விஜய், சிமரன், எஸ்பிபி போன்றவர்கள் நடித்த பிரியமானவளே படத்தின்போது ஒரு பாடல் பதிவேற்றப்பட்டது.
ஆனால் அந்த பாடலை விஜய் பாடி நடிக்கும்போது ஒரு வயதானவர் குரல் போல் இருந்ததாக கூறினாராம் தளபதி. அதே பாடலை வேறு ஒரு பாடகரை பாட வைத்து படமாக்கினார்களாம். அப்படத்தில் எஸ் பி பாலசுப்பிரமணியம் குரல் தனது செட் ஆகாது என விஜய் ஓப்பனாக சொன்னதால் எஸ் பி பாலசுப்ரமணியம் இனி விஜய் படங்களில் பாட மாட்டேன் எனவும் தெரிவித்து விட்டாராம்.
மேலும் விஜய்க்கு என் குரல் செட் ஆகாது எனவும் பெருந்தன்மையுடன் குறிப்பிட்டாராம் எஸ் பி பாலசுப்ரமணியம்.
இதன் மூலம் இருவருக்கும் கருத்துவேறுபாடு எதுவும் ஏற்படவில்லை எனவும் விஜய் சொன்னதை புரிந்து கொண்டு மனதார இந்த முடிவை எஸ் பி பாலசுப்பிரமணியம் எடுத்ததாகவும் கூறுகின்றனர். இதன் காரணமாகவே ஜில்லா படத்தில் மோகன்லாலுக்கு குரல் கொடுத்து முதல் பாடல் பாடியிருந்தார்.