படப்பிடிப்புகள் நடக்காது! தொலைக்காட்சி சிரியல்களும் நிறுத்தமா? ஷாக்காகும் ரசிகர்கள்..

coronavirus serials televition
By Edward May 18, 2021 01:50 PM GMT
Edward

Edward

Report

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் இரண்டாம் அலை அதி தீவிரமாக பரவி மூன்றாம் அலைக்கு செல்லும் அபாயம் நேரிரும் என மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து இந்தியாவில் அதிகமாக பரவி வரும் மாநிலங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் கடந்த மே10 ஆம் தேதியில் இருந்து மே 24 வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பதால் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு மே 15 வரை மட்டுமே படப்பிடிப்பு நடத்த அனுமதித்தனர்.

இந்நிலையில், இதுபற்றி பெப்ஸி தலைவர் ஆர்கே செல்வமணி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். மே 31 வரை படப்பிடிப்பு சார்ந்த எதுவும் நடைபெறாது என அறிவுத்தும் உள்ளார். சினிமா தொழிலாளர்கள் பாதிக்கபடுவதை எண்ணி பல பிரபலங்கள் நிதி அளித்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

படப்பிடிப்புகள் மே 31 வரை நடைபெறாத நிலையில் சீரியல்களின் ஒளிப்பரப்பு நிறத்தப்படலாம் என்றும் பழைய சீரியல்கள் மறுபடியும் ஒளிப்பரப்ப நேரலாம் என்று கூறப்படுகிறது.