கணவர் இறந்து 7 மாசம்!! நான் அனாதையாக இருக்க வடிவேலுதான் காரணம்!! பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகை வடிவேலுவாக் எனக்கு வாய்ப்பில்லாமல் போனது. அவரால் தான் இந்த நிலைமைக்கு ஆளாகினேன் என்று பிரபல காமெடி நடிகை பிரேமா பிரியா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழில் ஏபிசிடி, பம்பரக்கண்ணாலே, இந்திரலோகத்தில் இரு அழகப்பன், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

கணவர் மரணம்
சமீபத்தில் தனியார் இணையத்தளத்திற்கு பேட்டியளித்திருந்த பிரேமா பிர்யா வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை வெளிப்படையாக கூறி கண்ணீர் விட்டு அழுத்துள்ளார். 7 மாதங்களுக்கு முன் என் கணவர் சர்க்கரை நோயால் மரணமடைந்தார். அதுகுறித்து சினிமாவை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட விசாரிக்கவில்லை.
என் மகள் படிப்பிற்கு கூட கஷ்டப்பட்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். கணவர் இருப்பதற்கு முன் நன்றாக இருந்த வாழ்க்கை கணவர் இறந்தப்பின் இல்லை. சாப்பட்டுக்கே நிற்கதியாக நிற்கிறேன் எனவும் தெரிவித்தார்.

காரணமே வடிவேலு தான்
சினிமாவில் தனக்கு வாய்ப்பில்லாமல் போக காரணமே வடிவேலு தான். சுறா படத்தில் அவருடன் நான் நடிக்க இருந்தது. ஆனால் வடிவேலு என்னை நடிக்கவிடாமல் வேறொருவரை நடிக்கவைத்திவிட்டார்.
என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் அவருக்கு பிடிக்காதவராக இருந்ததால் பல படங்களில் என்னை நடிக்கவிடாமல் தடுத்து இந்த நிலைமைக்கு ஆளாக்கிவிட்டு விட்டார் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் பிரேமா பிரியா.
இதனால் கோபப்பட்டு வடிவேலுவிடம் சண்டையை போட்டிருக்கிறேன். ஏவிஎம் ஸ்டுடியோவில் கூட ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரின் முன்னிலையில் வடிவேலுவை கண்டப்படி திட்டியதால் தான் எனக்கு இன்றுவரை வாய்ப்பு கிடைக்காமல் போனது என்றும் தெரிவித்துள்ளார்.