சால்வை போட வந்த விஜய்!! தள்ளி நின்று விருதினை வாங்கிய மாணவி.. தளபதியின் ரியாக்ஷன்..
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவ மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழா கடந்த வெள்ளிக்கிழமை 28 ஆம் தேதி நடந்தது. மொத்தம் இரண்டு கட்டங்களாக விருது வழங்கும் விழா நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். பாராட்டு பெறும் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் சேர்ந்து நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில் நடிகர் விஜய், ஒரு மாணவியின் தொழில் தோளில் சால்வை அணிவித்து அவரின் தோள் மீது கை வைத்தார். திடீரென்று அந்த மாணவி விஜய்யிடம் கோரிக்கை வைத்தபடி தனது தோள் மீது இருந்த அவரது கையை எடுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் ஒரு மாணவி மாஸ் போட்டுக்கொண்டு விஜய்யிடம் விருதினை வாங்க வந்திருக்கிறார். அப்போது விஜய் மாணவிக்கு சால்வை போட ஆசையாய் வந்துள்ளார். மாணவி தள்ளி நின்றபடி சால்வையை கையில் வாங்கிக்கொண்டு விருதினை வாங்கியிருக்கிறார்.
உடனே விஜய் முகம் மாறி தள்ளி நின்றபடியே பேசிவிட்டு விருதினை கொடுத்து அனுப்பி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு நெட்டிசன்கள் கலாய்க்கும் வண்ணம் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சால்வையைப் போட விடலன்னு என்பதற்காக அவங்களிடம் சிடுசிடு என்று நடந்துக்கிறான் பாருங்க அவன் மூஞ்ச பாருங்களேன்...👇👇 pic.twitter.com/9B5xCSbAqk
— என் உயிர் Superstar ரஜினி ரசிகன் (@KABiLANS7) June 30, 2024