அற்ப காரணத்திற்காக விஜயகாந்தை எதிர்த்த வடிவேலு!! திட்டி பேசக்காரணம் இதுதான்..
தமிழ் சினிமாவின் வைகைப்புயல் என்ற பெயரோடு ஜொலித்து வரும் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல கலைஞர்கள் நடித்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்தாலும் வடிவேலு தங்களுக்கு துரோகம் தான் செய்து வந்தார் என்று அவருடன் நடித்த பல கலைஞர்கள் குற்றச்சாட்டு வைத்து வந்தனர். மேலும் தன்னை வளர்த்து தூக்கிவிட்ட விஜயகாந்த் அவர்களையும் மோசமான பேசி பகையை வளர்த்துக்கொண்டார்.
அதேபோல் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கும் இரங்கல் தெரிவித்தும் இறுதி சடங்கில் பங்கேற்பாரா வடிவேலு என்ற கேள்வி எழுந்து வந்த நிலையில் கூட, வடிவேலு இறுதி சடங்கிற்கு வராமல் இருந்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் தொண்டர்கள் கடுமையாக வடிவேலுவை திட்டித்தீர்த்து வந்தனர்.
இந்நிலையில் வடிவேலு மறைந்த புரட்சி கலைஞர் விஜயகாந்தை ஒரு அரசியல் மேடையில் திட்டிப்பேசியிருப்பார். அப்படி வடிவேலு பேசக்காரணம் என்ன என்று பத்திரிக்கையாளர் பயில்வான் பகிர்ந்துள்ளார். சின்னக்கவுண்டர் படத்தில் படம் முழுவதும் விஜயகாந்திற்கு குடைப்பிடிக்கும் படி வரும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் வடிவேலு. இயக்குனர் ஒருசில காட்சியில் மட்டும் வந்தால் போதும் என்று கூற, விஜயகாந்த் தான் வடிவேலு நம்ம ஊருக்காரன், படம் முழுவதும் வரட்டும் என்று கூறியிருக்கிறார்.
ஒருமுறை கேட்பன் வீட்டில் துயர சம்பவம் நடந்த போது கார் பார்க்கிங்கில் சின்ன பிரச்சனை ஏற்பட்டு குழப்பம் நிலவியது. அதற்கு வடிவேலு தான் காரணம். வடிவேலுவை பற்றி எந்த சூழ்நிலையிலும் விஜயாகாந்த் தவறாக பேசவே இல்லை. அதன்பின் தன் வடிவேலு அப்படி பேசியது தப்பு என்று மன வருந்தியிருக்கிறார்.
அரசியல் காரணமும் வடிவேலுவை கோபப்படச் செய்து, கோபத்தின் உச்சம் சிந்திக்கும் திறனை குறைத்து விட்டதாம். அதனால் தான் கேப்டனை பற்றி தரக்குறைவான வார்த்தைகளில் வடிவேலு பேசியிருக்கிறார்.
இந்த பிரச்சனையால் தான் வடிவேலு கேப்டனின் இறுதி சடங்கிற்கு வரவில்லை என்றே தெரிகிறது. மேலும் மதுவுக்கு அடிமையாகாமல் இருந்து இருக்கலாம் அது தான் என்னோட வருத்தம் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.