பிரபல இயக்குனரால் மோசடி செய்யப்பட்ட நடிகை சித்தாரா!! உண்மையை உடைத்த பிரபலம்..
கல்யாண வயது வந்தும் சிங்கிளாகவே இருக்கும் நடிகைகள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் நடிகை சித்தாரா, இவர் படையப்பா படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து பிரபலம் அடைந்தார். இவர் 51 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமலேயே உள்ளார்.
அதற்கு என்ன காரணம் என்பதையும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதாவது அவர் சினிமாவில் டாப் நாயகியாக வலம் வந்தபோது ஒருவரை காதலித்துள்ளார், ஆனால் அது கைக்கூடி வரவில்லை. அந்த நினைப்பிலேயே இதுவரை திருமணம் செய்யாமல் இருந்துவிட்டாராம். சமீபத்தில் சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் சித்தாரா பற்றிய ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பாலச்சந்தர் என்னை மோசடி செய்துவிட்டதாக கண்ணீருடன் கூறியிருக்கிறார் சித்தாரா. அவ்வளவு பெரிய இயக்குனர் இப்படி செய்வார் என்று நினைத்து பார்க்கவில்லை என்றும் சித்தாரா கூறியதாக வித்தகன் சேகர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு : இந்த தகவலை பத்திரிக்கையாளர் வித்தகன் சேகர் சொல்லியிருப்பதை தான் இந்த செய்தியில் பதிவிட்டுள்ளோம். இந்த தகவலுக்கும் விடுப்பு தளத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.