நடிகர் விவேக் மறைவுக்கு முன் தடுப்பூசி! இந்த இரு காரணங்கள் தான் உண்மையை உடைத்த பிரபலம்
தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு இவர்களுக்கு அடுத்ததாக காமெடி ஜாம்பவானாக கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் விவேக். சமுக அக்கரை கொண்டு காமெடிகளிலும் விழிப்புணர்வு மற்றும் யோசிக்கவைக்கும் நிலையை ஏற்படுத்தியவர் விவேக்.
கடந்த ஏப்ரல் 16ல் கொரோனா வைரஸை தடுக்க தடுப்பூசி அவசியம் என்ற விழிப்புணர்வு செய்ய தடுப்பூசி போட்டு கொண்டார். இதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 17 யாரும் எதிர்ப்பாராத வண்ணம் விவேக் மாரடைப்பால் மரணமடைந்தார்.
விவேக் மறைவிற்கு தடுப்பூசி தான் காரணம் என்ற விமர்சனம் எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. விவேக் தடுப்பூசி போட்டதற்கு காரணமே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தடுப்பூசி நல்லதா, கெட்டதா என மக்கள் யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களது பயத்தைப் போக்கவும் தான் அவர் ஊசி போட்டுக் கொண்டார் என பிரபல நடிகர் வையாபுரி கூறியுள்ளார்.