<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Gossip News - Viduppu.com | Tamil Cinema News | Tamil TV News | Kollywood Tamil News | Photo | Video | Viduppu.com</title>
    <subtitle type="html"><![CDATA[Viduppu.com  Provides all latest Cinema news, breaking news, TV News, video, audio, photos, entertainment and other cinema news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <id>https://viduppu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/vp/img/logo.png</logo>
            <updated>2026-07-26T07:42:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சிறகடிக்க ஆசை நடிகை ப்ரீத்தி ஸ்பந்தனாவின் கிளாமர் போட்டோஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/siragadikka-aasai-preethi-spandanah-recent-photos-1785051058"></link>
            <id>https://viduppu.com/article/siragadikka-aasai-preethi-spandanah-recent-photos-1785051058</id>
            <summary type="text">சிறகடிக்க ஆசை ப்ரீத்திசின்னத்திரை சீரியல்களில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று தான் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சிறகடிக்க ஆசை ப்ரீத்தி</h2><p>சின்னத்திரை சீரியல்களில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியல்களில் ஒன்று தான் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர்.</p><p> டிஆர்பியில் முதல் இடம் பிடித்து வரும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு தனியொரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a5ea36a0-1fad-450b-b304-132010729c64/26-6a65b7bb24fbe.webp' /></p><p> </p><p>அந்தவகையில், மீனாவின் தம்பி சத்யா காதலித்து திருமணம் செய்து கொண்ட ரேகா ரோலில் நடித்து வரும் ப்ரீத்தி ஸ்பந்தனாவிற்கென தனி ரசிகர்கள் பட்டாளம் தொடங்கியுள்ளது.</p><p> அமைதியான பெண்ணாக வரும் ப்ரீத்தி ரியல் வாழ்க்கையில் மாடர்ன் பெண். அவரின் சமீபத்திய கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-26T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாணவர் போராட்டம் குறித்து சர்ச்சையான கருத்து!! பேர்லே மானிவை வாய் அடைக்க வைத்த பிரபலம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/pearl-maaney-faces-criticism-over-comments-1785048689"></link>
            <id>https://viduppu.com/article/pearl-maaney-faces-criticism-over-comments-1785048689</id>
            <summary type="text">பேர்லே மானிசினிமா நட்சத்திரங்களை தன்னுடைய தனித்துவமான பேச்சுக்களால் பேட்டியெடுத்து பிரபலமானவர் தான் பேர்லே மானி. பட பிரமோஷன்களுக்கு பிரபலங்களை பேட்டிய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பேர்லே மானி</h2><p>சினிமா நட்சத்திரங்களை தன்னுடைய தனித்துவமான பேச்சுக்களால் பேட்டியெடுத்து பிரபலமானவர் தான் பேர்லே மானி. பட பிரமோஷன்களுக்கு பிரபலங்களை பேட்டியெடுத்து வரும் பேர்லே மானே, ஒரு அதிர்ச்சிகரமான ஒரு பதிவினை சோசியல் மீடியாகளில் பகிர்ந்துள்ளார். </p><p>நீட் தொடர்பான ஒரு பதிவினை போட்டதால் பிரச்சனை அவருக்கு ஆரம்பமாகியுள்ளது. நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, வீட்டுக்கு திரும்பி செல்லுங்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/240fd2d4-4188-47bb-add9-eddffb51b66b/26-6a65ae7390d23.webp' /></p><p>எந்த ஒரு காரணத்திற்காகவும் ஒரு உயிரை இழப்பது மதிப்புக்குரியது அல்ல. ஒவ்வொரு மாணவரும் யாருடையதோ குழந்தை. யாருடையதோ கனவு. யாருடையதோ முழு உலகமும். இந்த இயக்கத்தின் உண்மையான நோக்கம் ஒருபோதும் மங்கிவிடாது என்று நம்புகிறேன் என்று பேர்லே மானே தெரிவித்திருக்கிறார். </p><p>

இதற்கு அவரை விமர்சித்து கருத்து பகிரப்பட்டு வந்த நிலையில், தன்னுடைய பேச்சு சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களே தன்னை விமர்சிப்பதாகவும் தன்னை விமர்சித்த இயக்குநரை தோல்வியடைந்த திரைப்பட இயக்குநர் என்றும் குறிப்பிட்டுள்ளார் பேர்லே மானி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b5f5df72-caf5-4e70-a76c-516f63f7a2a6/26-6a65ae7442928.webp' /></p><p> </p><p>

மேலும் தன்னுடைய கருத்துகளை காரமாக்குவதற்காக மிளகாய்த்தூள், அஜினோமோட்டோ சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியக் கோடியிலுள்ள காவி நிறம் தனக்கு பிடிக்கும் என்பதால், காவி தன்னுடைய விருப்பமான நிறம் எனவும் கூறியிருக்கிறார். இந்தக் கருத்தும் அரசியல் ரீதியாகப் பார்ப்பட்டு சோசியல் மீடியாகளில் விவாதத்தை ஏற்படுத்தியது.
</p><h2>சிபி மலையில்&nbsp;</h2><p>
இதனிடையே சிபி மலையில் 

 தந்தையும் தேசிய விருது பெற்ற இயக்குநருமான சிபி மலையில் 

 தோல்வியடைந்த இயக்குநர் என்று குறிப்பிட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள். தன்னுடைய தந்தையை விமர்சித்த பேர்லேவுக்கு ஜோ மலாயில் மகன், யாருகிட்ட பேசுறன்னு தெரிந்து பேசு என்று பேர்லே மானிவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இந்த சண்டை மலையாள சினிமாவில் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் சைலெண்ட் மூடுக்கு சென்றுவிட்டார் பேர்லே மானே.</p>]]></content>
            <updated>2026-07-26T06:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கேரவனில் திடீரென நுழைந்து சட்டையை கழட்டிய உதவி இயக்குநர்!! அதிச்சியான காஜல் அகர்வால்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kajal-aggarwal-reveals-shocking-incident-shooting-1785045451"></link>
            <id>https://viduppu.com/article/kajal-aggarwal-reveals-shocking-incident-shooting-1785045451</id>
            <summary type="text">தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை காஜல் அகர்வால், உதவி இயக்குநர் செய்த ஒரு சம்பவத்தை பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். காஜல் அக...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை காஜல் அகர்வால், உதவி இயக்குநர் செய்த ஒரு சம்பவத்தை பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9d7650db-d61f-49ee-90db-4a7c990774c9/26-6a65a1cd97a9b.webp' /></p><p> </p><h2>காஜல் அகர்வால்</h2><p>அதில், நான் ஒரு படத்தின் படப்பிடிப்பு சூட்டுக்காக போயிருந்தேன். அப்போது இடைவேளை என்பதால் சூட்டின் கேரவனில் தனியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய ஒருவர் கதவை கூட தட்டாமல் திடீரென கேரவனுக்குள் வந்துவிட்டார். அந்த நபர் சாதாரண ரசிகர் போல் வாழ்த்து சொல்ல வரவில்லை. </p><p>தன் முன் தன்னுடைய சட்டையை கழட்டி மார்பில் குத்தியிருந்த டாட்டூவை காட்டினார். அந்த டாட்டூவில் இருந்தது என் பெயர் தான். இந்த சம்பவத்தை எதிர்ப்பார்க்காமல் அதிர்ச்சியடைந்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bff02077-fe19-45c9-9168-08ae07c5cc9b/26-6a65a1cce8470.webp' /></p><p> திடீரென ஒருவர் வந்து தன் முன் சட்டையை கழட்டுவதை பார்த்து பயப்பட்டாலும், பின் நடந்தது தனக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸாக இருந்தாலும் இது எனக்கு பிடிக்காத அதிர்ச்சி என்று கூறியிருக்கிறார் காஜல். </p><p>மேலும் எனக்கு ரசிகர்கள் மீது இப்போதும் எப்போதும் அன்பும் மரியாதையும் இருக்கிறது. ஆனால் ஒரு பெண் தனியாக இருக்கும் இடத்திற்கு அனுமதியில்லாமல் நுழைவது தவறு. யாராக இருந்தாலும் மற்றவர்களின் தனிப்பட்ட உரிமையையும் மதிக்க வேண்டும். ரசிகர் என்ற பெயரில் எல்லை மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதே சமயம் தான் கோபப்படாமல் அமைதியாக அந்த உதவி இயக்குநரை எச்சரித்து வெளியேற்றியதாகவும் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-26T05:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தாய்லாந்தில் கணவருடன் 36வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சாக்ஷி அகர்வால்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/sakshi-agarwal-celeb-36th-birthday-in-thailand-1785041644"></link>
            <id>https://viduppu.com/article/sakshi-agarwal-celeb-36th-birthday-in-thailand-1785041644</id>
            <summary type="text">சாக்ஷி அகர்வால்தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் துணை நாயகியாக அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதன்பின் கன்னடம், மலையாளம் போன்ற மொழிக...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சாக்ஷி அகர்வால்</h2><p>தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் துணை நாயகியாக அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதன்பின் கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்தவர் மிகவும் பிரபலமான, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/8cd373f6-1f2b-4aed-95f6-2a20602d6616/26-6a6592f8e6648.webp' /></p><p>
</p><p>
அதன்பின் சரியான சினிமா பக்கம் வரவில்லை, மாறாக போட்டோ ஷுட்களில் பிஸியானார். கடந்த ஆண்டு தன்னுடைய நீண்டநாள் காதலரை திருமணம் செய்து சர்ப்ரைஸ் கொடுத்தார். </p><p>இதனையடுத்து ஜூலை 20 ஆம் தேதி தன்னுடைய 36வது பிறந்தநாளை கொண்டாடிய சாக்ஷி, தற்போது தன் கணவருடன் தாய்லாந்து சென்று பர்த்டே பார்ட்டியை கொண்டாடியிருக்கிறார். கேக் வெட்டி கிளாமர் ஆடையில் எடுத்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-26T04:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தனுஷை நம்பிதான் வேலையை விட்டு வந்தேன்!! அன்பே டயானா பட ஹீரோயின் ஓபன் டாக்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/anbe-diana-ramya-ranganathan-reveals-dhanush-1785039735"></link>
            <id>https://viduppu.com/article/anbe-diana-ramya-ranganathan-reveals-dhanush-1785039735</id>
            <summary type="text">நடிகர் தனுஷ் இயக்கி வெளியான படமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரம்யா ரங்கநாதன். இப்படத்திற்க...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் தனுஷ் இயக்கி வெளியான படமான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரம்யா ரங்கநாதன். இப்படத்திற்கு பின் பாரி இளவழகன் இயக்கத்தில் அன்பே டயானா படத்தில் ஹீரோயினாக நடித்தார். படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரம்யாவுக்கு கொடுத்து வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4cb122cd-f4c0-4432-8ede-764afd9d2f16/26-6a658b7a14ff3.webp' /></p><p> </p><p>இந்நிலையில் யூடியூப் சேனலுக்கு ரம்யா அளித்த பேட்டியொன்றில், நான் கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன். என்னுடைய நடனத்தை பார்த்து தனுஷுக்கு பிடித்துவிட்டதால் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் என் அருகே தனுஷ் இருந்தார். அவர் வழிகாட்டினார். </p><p>அப்படம் முடிந்தப்பின் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை. நான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டபோது பெரிதாக தெரிந்தது. ஏனென்றால் மாதம் மாதம் நிலையான வருமான வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9b72f921-fda4-49ab-9d41-245d9ba9500c/26-6a658b7963a24.webp' /></p><p> தனுஷ் சார்தான் என்னிடம், என்னை நம்புங்கள், உங்களுக்கு பெரிய எதிர்காலம் சினிமாவில் இருக்கிறது. ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைக்காதீர்கள், கண்டிப்பாக என்னை நம்பி வாருங்கள் என்று கூறினார். அதை நம்பி வேலையை விட்டுவிட்டேன். அந்த முடிவை எடுத்தால்தான் அடுத்தக்கட்டத்திற்கு போக முடியும் என்று எனக்கும் தோன்றியது என்று ரம்யா ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-26T04:15:00+00:00</updated>
        </entry>
    </feed>
