<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Gossip News - Viduppu.com | Tamil Cinema News | Tamil TV News | Kollywood Tamil News | Photo | Video | Viduppu.com</title>
    <subtitle type="html"><![CDATA[Viduppu.com  Provides all latest Cinema news, breaking news, TV News, video, audio, photos, entertainment and other cinema news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <id>https://viduppu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/vp/img/logo.png</logo>
            <updated>2026-07-15T06:38:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[42 வயதில் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை ரேஷ்மா!! ரீசெண்ட் சேலை புகைப்படங்கள்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/reshma-pasupuleti-saree-photoshoot-post-1784096194"></link>
            <id>https://viduppu.com/article/reshma-pasupuleti-saree-photoshoot-post-1784096194</id>
            <summary type="text">ரேஷ்மா பசுபுலடிவாணி ராணி, வம்சம், மரகத வீணை, என் இனிய தோழியே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலடி.

அமெரிக்க செய்திய...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரேஷ்மா பசுபுலடி</h2><p>வாணி ராணி, வம்சம், மரகத வீணை, என் இனிய தோழியே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலடி.

அமெரிக்க செய்தியாளராக திகழ்ந்து இந்தியா பக்கம் வந்து சின்னத்திரை வெள்ளித்திரை என நடித்து வந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/79031bcf-03ed-42c2-bd69-7a6f462c79bc/26-6a5725ca58657.webp' /></p><p>

கடந்த ஆண்டு பாக்கியலட்சுமி சீரியல் முடிந்தப்பின் தற்போது, கார்த்திகை தீபம், மகளே என் மருமகளே என்ற சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் ரேஷ்மா.</p><p>

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, அடக்கவுடக்காமன சேலையணிந்தும், மாடர்ன் ஆடையணிந்தும் புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருவார்.
</p><p>
தற்போது சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-15T06:16:46+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஏ ஆர் முருகதாஸ் பேரில் என்னை ஏமாற்றினார்கள்!! ஸ்வாசிகா கிளப்பிய புது சர்ச்சை...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/swasika-shared-her-struggles-during-entering-1784092790"></link>
            <id>https://viduppu.com/article/swasika-shared-her-struggles-during-entering-1784092790</id>
            <summary type="text">ஸ்வாசிகாமாமன், லப்பர் பந்து, கருப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்வாசிகா. ஆரம்பத்தில் சீரியலில் நடித்திருந்தாலும் இப்போது பட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஸ்வாசிகா</h2><p>மாமன், லப்பர் பந்து, கருப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்வாசிகா. ஆரம்பத்தில் சீரியலில் நடித்திருந்தாலும் இப்போது படங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
</p><p>
மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகா நடிகை நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார். திருமணமாகி நடித்து வரும் ஸ்வாசிகாவுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரின் போட்டோஷூட்டுக்கு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.</p><p> இந்நிலையில், சினிமாத்துறையில் தனக்கு நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c8afacb3-c48b-4c4e-bb2f-a592cf55d024/26-6a57187849ec2.webp' /></p><p> </p><h2>ஏ ஆர் முருகதாஸ் பேரில்</h2><p>ஸ்வாசிகா கூறுகையில், 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு நடிக்க வந்துவிட்டேன். நிறைய மேனேஜர்கள் என்னை ஏமாற்றி இருக்கிறார்கள். சில இடங்களுக்கு செல்லும்போது ரொம்பவும் பயமாக இருக்கும். ஏ ஆர் முருகதாஸை பார்க்கலாம், லிங்குசாமியை பார்க்கப் போகலாம் என்று சொல்லி என் அம்மாவிடம் நகையெல்லாம் வாங்கி ஏமாற்றி விட்டார்கள். அதற்கு பிறகு அம்மாவுக்கும் பயம் வந்துவிட்டது. </p><p>அந்நேரத்தில் வைகை, கோரிப்பாளையம் இரண்டும் வெளியாகி இருந்த போது எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டை விட்டு சென்று கேரளா சென்றோம். அங்கு மலையாள சினிமாவில் முயற்சி செய்து காத்திருந்த நேரத்தில் சும்மா இருப்பது சரி என தோன்றாமல் தான் நிகழ்ச்சி தொகுப்பாளர், சீரியலில் நடிப்பது என முடிவெடுத்தேன். லப்பர் பந்து படம் வந்தப்பின் தான் எனக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டு கிடைத்தது. </p><p>நிறைய பேர் கண் கலங்கினார்கள். இன்றும் 10 சதவீதம் மேனேஜர்கள் சினிமாவில் ஏமாற்றுவதற்காகவே இருக்கிறார்கள் என்று நடிகை ஸ்வாசிகா தெரிவித்துள்ளார். இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-15T05:20:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் அம்மா ஆக எப்போதும் விரும்பினேன்.. உருக்கமாக பேசிய நடிகை சமந்தா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/samantha-emotionally-talk-about-her-pregnancy-1784085048"></link>
            <id>https://viduppu.com/article/samantha-emotionally-talk-about-her-pregnancy-1784085048</id>
            <summary type="text">இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருப்பவர் சமந்தா.&amp;nbsp;இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எங்கள் தங்கம் திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோட...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருப்பவர் சமந்தா.&nbsp;இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எங்கள் தங்கம் திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/186c6fe5-8d38-4072-9cf9-8214307ed25a/26-6a56fa3c14445.webp' /></p><p> </p><p>நடிகை சமந்தா தற்போது கர்ப்பமாக இருப்பதால் அடுத்து மீண்டும் சினிமாவில் இருந்து ஒரு பிரேக் எடுக்க போகிறார். இதனை அவரே அறிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/43dec869-d9cb-4089-8325-f125f1e5a55a/26-6a56fa3cb8ea4.webp' /></p><p> 

இந்நிலையில் சமந்தா அளித்த சமீபத்திய பேட்டியில், தான் தாய்மையை அடைய ஆவலுடன் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். "நான் அம்மா ஆக எப்போதும் விரும்பினேன். நான் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் ஆர்வத்துடன் (passion) தான் இருந்தேன். தற்போது ஒரு புது வித வலிமை மற்றும் நோக்கத்தை என்னிடம் உணர்கிறேன். இந்த பயணத்திற்காக நான் காத்திருக்கிறேன்." என கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fd05d1f7-9ff7-4b9a-8d98-05fa9e048774/26-6a56fa3b620a9.webp' /></p><p>

நடிகை சமந்தாவின் இந்த உருக்கமான பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.</p>]]></content>
            <updated>2026-07-15T03:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சினிமால பணம் சம்பாதிக்கலாம்..அவமானங்கள் தான் அதிகம்!! நடிகை விசித்ரா ஓபன் டாக்...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-vichithra-opens-up-cinema-industry-1784036638"></link>
            <id>https://viduppu.com/article/actress-vichithra-opens-up-cinema-industry-1784036638</id>
            <summary type="text">தமிழ் சினிமவில் 90ஸ் காலத்தில் மடிப்பு அம்சாவாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை விசித்ரா. பல ஆண்டுகளுக்கு பின் பிக்பாஸ் மற்றும் குக் ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சினிமவில் 90ஸ் காலத்தில் மடிப்பு அம்சாவாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை விசித்ரா. பல ஆண்டுகளுக்கு பின் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் கலந்து அனைவரது அன்பையும் பெற்றார் விசித்ரா. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், சினிமா என்பது மிக வேகமாக, நிறையப் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு களம்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2238b3ca-0d1d-4350-ba14-69acd8f79e92/26-6a563d2179e85.webp' /></p><p> </p><h2>சினிமால பணம் சம்பாதிக்கலாம்</h2><p>அதில் புகழும், பணமும் கிடைக்கும், ஆனால் அங்கே உண்மையான அன்பும், கருணையும் கிடைக்குமா? என்றால் கிடையாது. அதுவும் புதுமுகமாக சினிமாவுக்குள் நுழையும்போது, அங்கே அன்பை எதிர்பார்க்கவே முடியாது. ஆரம்பத்தில் அவமானங்கள், கேலி கிண்டல்கள், அலட்சியங்கள் மட்டும்தான் அதிகம் பார்க்க வேண்டியிருக்கும். </p><p>ஆனால் ஒரேவொரு, ஹிட் படம் கொடுத்துவிட்டால் போதும், உங்களுக்கு என்று ஒரு மார்க்கெட் வந்திவிட்டால், உங்களை அவமதித்த அத்தனை பேரும் புகழ்வார்கள், அதுதான் சினிமா. சினிமாத்துறையை பொறுத்தவரை இங்கு நிரந்தரமான நண்பனும் கிடையாது, நிரந்தரமான எதிரியும் கிடையாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/317b3a75-6f27-4934-b8dd-7c70694f04e7/26-6a563d20ca135.webp' /></p><p> </p><p>அதனால் தான் சினிமாவில் எப்போதும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் இருக்க வேண்டும். நம்மிடம் மிகவும் பாசமாக பழகுகிறார்களே என்று நெருங்கிவிடக் கூடாது. </p><p>அதேபோல், எதிரியாக்கி ஒதுக்கவும் கூடாது. ஏனென்றால், காலம் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறும். நான் எப்போதுமே சினிமா நபர்களிடம் ஒரு குறிப்பிட்ட தூரத்தை கடைப்பிடிப்பேன். யாரிடமும் அளவுக்கதிகமாக நெருங்கிப்பழக மாட்டேன். </p><p>அந்த எல்லையை நான் சரியாக வைத்திருந்ததால்தான், இன்று என் வாழ்க்கையை நான் எந்த குழப்பமும் இல்லாமல் மிகுந்த சந்தோஷத்தோடு நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்று நடிகை விசித்ரா தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-15T02:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
