<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Gossip News - Viduppu.com | Tamil Cinema News | Tamil TV News | Kollywood Tamil News | Photo | Video | Viduppu.com</title>
    <subtitle type="html"><![CDATA[Viduppu.com  Provides all latest Cinema news, breaking news, TV News, video, audio, photos, entertainment and other cinema news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <id>https://viduppu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/vp/img/logo.png</logo>
            <updated>2026-09-07T09:39:54+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வசிய மருந்தால் கர்ணாவை வசப்படுத்த திட்டமிடும் புவனா.. கர்வம் கொள்ளும் கர்ணா! - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/chinna-siru-kiliye-today-episode-1788763105"></link>
            <id>https://viduppu.com/article/chinna-siru-kiliye-today-episode-1788763105</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. கடந்த ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. கடந்த எபிசோடில் புவனா, கர்ணாவையும் தன்னையும் சேர்த்து வைப்பதாக கூறிய கிருபாவிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய நிலையில், இன்றைய எபிசோடில் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேற உள்ளன.</p><p>அதாவது, கர்ணாவும் இந்துவும் நாளுக்கு நாள் நெருக்கமாகி வருவதை நினைத்து வேதனைப்படும் புவனா, கிருபாவிடம், “ஆறு மாதத்தில் கர்ணாவை என்னுடன் சேர்த்து வைப்பதாக சொன்னீர்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அது முடியாது என்றால் சொல்லுங்கள், நான் உயிரை விடுகிறேன்” என்று உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறாள்.
</p><p>அதற்கு கிருபா, “நான் சொன்னது கண்டிப்பாக நடக்கும். கர்ணா உன்னுடன் சேர்வார்” என்று உறுதியளித்து புவனாவுக்கு வாக்கு கொடுக்கிறார்.
</p><p>மறுபக்கம், இந்துவுக்காக கர்ணா ஆசையுடன் பூரி சமைத்து கொண்டிருக்கிறார். அப்போது இந்துவை பார்க்க வரும் பாலு, கர்ணாவின் இந்த பாசமான செயலை கண்டு மனம் மகிழ்கிறார். இந்துவும், “வாங்கப்பா, சாப்பிடலாம்” என்று அன்புடன் அழைக்க, கர்ணாவும் “வாங்க மாமா” என்று வரவேற்கிறார்.
</p><p>கையில் கத்தியுடன் சுற்றிக்கொண்டிருந்தவன் இன்று கையில் கரண்டியுடன் சமையல் செய்து கொண்டிருக்கும் கர்ணாவை பார்த்த பாலு, அவரின் மாற்றத்தை நினைத்து நெகிழ்கிறார். மேலும், “உங்களை இப்படி சந்தோஷமாக பார்த்ததே எனக்கு போதும். என் மனசு நிறைஞ்சுடுச்சு” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்.
</p><p>இதற்கிடையில், தீனதயாளனை மருத்துவமனைக்கு அழைத்து வரும் இந்து, கர்ணா மற்றும் சித்ரா ஆகியோர் அங்கு பாஸ்கர் மற்றும் முத்தழகியை சந்திக்கின்றனர். அப்போது பாஸ்கர், ஒரு திறமையான மருத்துவர் குறித்து தகவல் கூறி, “அவரை சந்தித்தால் தீனதயாளனின் கால் நிச்சயமாக குணமாகும்” என்று நம்பிக்கை அளிக்கிறார்.
</p><p>மற்றொரு புறம், கர்ணாவை எப்படியாவது தன் வசப்படுத்த வேண்டும் என முடிவெடுக்கும் புவனா, தனது தோழியுடன் கேரளாவைச் சேர்ந்த நம்பூதிரியை சந்திக்கிறாள். அப்போது அவர் ஒரு மருந்தை கொடுத்து, “இதை யாருக்குக் கொடுக்கிறாயோ அவர்கள் 12 மணி நேரம் உன் கட்டுப்பாட்டில் இருப்பார்கள்” என்று கூறுகிறார். இதனால் புவனா அடுத்ததாக என்ன செய்யப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.
</p><p>மேலும், தேர்தல் தொடர்பாக கர்ணா ஒரு யோசனையை கூற, திவாகரன் அதனை அலட்சியமாக எடுத்துக்கொண்டு கிண்டலாக பேசுகிறார். இதனால் கிருபா, “ஏன் இப்படிப் பேசுற? அவன் நம்ம தம்பிதானே” என்று திவாகரனை கண்டிக்கிறார். இதைக் கேட்டு கர்ணா திவாகரனை கோபமாக முறைக்கிறார்.
</p><p>இப்படி விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்த இந்தக் கதையில் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது? புவனாவின் திட்டம் வெற்றியடையுமா? கர்ணா மற்றும் இந்துவின் வாழ்க்கையில் புதிய சிக்கல் உருவாகுமா? என்பதை அறிய சின்னஞ்சிறு கிளியே சீரியலை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு Zee தமிழ் தொலைக்காட்சியில் தவறாமல் காணுங்கள்.
&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-07T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கிளாமர், இன்டிமேட் சீனுக்கு நான் ரெடி!! தன் ஆசையை சொன்ன நடிகை டாப்ஸி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/taapsee-pannu-on-rejecting-action-films-1788698540"></link>
            <id>https://viduppu.com/article/taapsee-pannu-on-rejecting-action-films-1788698540</id>
            <summary type="text">டாப்ஸிபாலிவுட்டில் போல்ட்டான நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை டாப்ஸி நடிப்பில் வெளியான கங்காதரி படம் தற்போது ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>டாப்ஸி</h2><p>பாலிவுட்டில் போல்ட்டான நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை டாப்ஸி நடிப்பில் வெளியான கங்காதரி படம் தற்போது ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.</p><p> சமீபத்தில் டாப்ஸி அளித்த பேட்டியில், ஒரு நடிகை ஒரு சீரியஸான, ஆக்ஷன் ரோலில் நடித்து ஹிட் கொடுத்தால், அதேமாதிரியான கதையை தூக்கிட்டு வந்துவிடுகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d95edcf1-fecd-4b01-93f0-ff5e3aaca182/26-6a9d5faebac47.webp' /></p><p> என்னை ஏன் எப்போதுமே திரில்லர், அக்ஷன், சீரியஸான ரோலில் பூட்டி வைக்கிறீங்க, வேற கோணத்துல என்னை வைத்து யோசிக்கவே மாட்டீங்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.</p><h2>கிளாமர், இன்டிமேட்ன்</h2><p>மேலும், எனக்கும் ஒரு அழகான, ரொமாண்டிக் லவ் ஸ்டோரியில் நடிக்கணும்னு ஆசை. திரையில் தாராள கவர்ச்சி காட்டி, ரொமாண்டிக் அண்ட் இண்டிமேட் சீன்களில் நடிக்க வேண்டும் என்று எனது நீண்ட நாள் ஆசை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ff319a4-cc75-48fe-8c0c-675f45560416/26-6a9d5faf70794.webp' /></p><p> </p><p>திரையுலகில் எத்தனையோ காதல் படங்கள் வெளியாகிறது. ஆனால் என்னை வைத்து மட்டும் ஏன் ஒரு அழகான காதல் கதையை யாரும் யோசிக்க மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னை பழைய சீரியஸ் டாப்ஸியாக இல்லாமல் முழுக்கமுழுக்க ஒரு கிளாமரான, காதல் நாயகியாக காட்டக்கூடிய நல்ல ரொமாண்டிக் கதைகளுக்காக நான் காத்திருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.</p>]]></content>
            <updated>2026-09-07T06:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[உடம்பைத்தான் பாக்குறாங்க..குழந்தை பெற்றப்பின் கொந்தளித்த நடிகை பிபாஷா பாசு]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/bipasha-basu-slams-body-shamers-post-pregnancy-1788698356"></link>
            <id>https://viduppu.com/article/bipasha-basu-slams-body-shamers-post-pregnancy-1788698356</id>
            <summary type="text">பிபாஷா பாசுபாலிவுட் நடிகை பிபாஷா பாசு, சமீபத்தில் குழந்தை பெற்றப்பின் உடல் எடை கூடியதை வைத்து சோசியல் மீடியாகளில் பாடி ஷேமிங், ட்ரோல்களுக்கு ஆளாகினார்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிபாஷா பாசு</h2><p>பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, சமீபத்தில் குழந்தை பெற்றப்பின் உடல் எடை கூடியதை வைத்து சோசியல் மீடியாகளில் பாடி ஷேமிங், ட்ரோல்களுக்கு ஆளாகினார். தன்மீது வீசப்பட்ட இந்த கொடூரமான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பிபாஷா பாசு.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f8addea9-599e-4a33-8c5f-156ea38b76bb/26-6a9d5ef6ce733.webp' /></p><p> </p><p>அதில், இந்த சமூகம் பெண்களின் உடலை பார்க்கும் விதம் மிகவும் விசித்திரமாக இருக்கிறது. ஒரு பெண், குழந்தை பெற்றெடுத்த உடனே, என்னவோ மந்திரவாதி போலத்தான் 40 வயதிலும், 20 வயதில் இருந்தது போன்ற ஸ்லிம்மான உடலமைப்பிற்கு திரும்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் 20 வயது பெண்ணிடம் என்ன எதிர்பார்க்கிறார்களோ, அதையே 40 வயது பெண்ணிடமும் எதிர்பார்ப்பது எவ்விதத்தில் நியாயம்?
</p><p>குழந்தை பிறந்தப்பின் சட்டென பழைய நிலைக்கு மாறாத பெண்கள் மிகமோசமான ட்ரோகளை சந்திக்கிறார்கள். என் மகள் தேவி பிறந்தப்பின் நானும் இந்த மிக கொடூரமான, தங்கிக்கொள்ள முடியாத பாடி ஷேமிங், ட்ரோல்களை அனுபவித்தேன். நான் வெளியில் செல்லும்போது கேமராமேன்கள் என்னை விசித்திரமான கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் பரப்பினார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/acd0acf6-5b9f-4764-b803-865cc047ac38/26-6a9d5ef782f74.webp' /></p><p> ஒரு தாய் தன் குழந்தையை வளர்க்க, தாய்மைக்கு மாற எவ்வளவு கஷ்டப்படுகிறாள் என்று யாருக்கும் கவலையில்லை, எல்லாரும் உடனே பழைய பிபாஷாவாக மாற வேண்டும் என்று மட்டுமே நினைக்கிறார்கள். தாய்மை என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக அழகான தருணம், அதில் ஏற்படும் உடல்மாற்றங்களை கேலி செய்யாமல் அவர்களை கொண்டாட வேண்டும் என்று ஆதங்கத்துடன் பிபாஷா பாசு தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-07T04:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
