<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Gossip News - Viduppu.com | Tamil Cinema News | Tamil TV News | Kollywood Tamil News | Photo | Video | Viduppu.com</title>
    <subtitle type="html"><![CDATA[Viduppu.com  Provides all latest Cinema news, breaking news, TV News, video, audio, photos, entertainment and other cinema news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <id>https://viduppu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/vp/img/logo.png</logo>
            <updated>2026-09-10T10:51:02+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தீயில் எரிந்த கல்யாண புடவை.. கவிதாவால் காத்திருந்த கலவரம் - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/thirumangalyam-serial-in-zee-tamil-sep-10-episode-1789034744"></link>
            <id>https://viduppu.com/article/thirumangalyam-serial-in-zee-tamil-sep-10-episode-1789034744</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம். நேற்றைய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம். நேற்றைய எபிசோடில் கவிதா மஹாவின் கல்யாண புடவையை தீயில் போட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. </p><h2>திருமாங்கல்யம் இன்றைய எபிசோட்</h2><p>

அதாவது தனது கல்யாண புடவை பற்றி எரிவதை பார்த்து மகா அதிர்ச்சி அடைந்து ஓடி வந்து புடவையை அணைக்க முயற்சி செய்ய திவ்யா என்ன பண்ற? வேற புடவை வாங்கிக்கலாம் என தடுக்க முயற்சி செய்ய மகா என்னுடைய கல்யாண புடவை என்று சொல்லி அதை எடுத்து அணைத்து பத்திரப்படுத்த திவ்யா யார் இப்படி செய்தது என கோபப்பட கவிதா நான் தான் அது ரொம்ப அழுக்காக கடந்தது அதனால எடுத்து தீயில் போட்டேன் என்று சொல்கிறாள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/3c1cc1c9-3825-4cdb-b2ae-4d79e1929978/26-6aa280fad9a4f.webp' /></p><p>
</p><p>
இதைக் கேட்டு அம்பிகா மற்றும் தாத்தா என இருவரும் கவிதாவை பிடித்து திட்டுகின்றனர். மகாவுக்கு தீயை அணைத்ததால் கையில் காயம் ஏற்பட்டிருக்க திவ்யா அவளை அழைத்துச் சென்று கைக்கு மருந்து போட்டுவிட்டு திட்டுகிறாள். மகா தனது திருமணம் பற்றியும் திருமண புடவை பற்றியும் எமோஷனலாக பேச திவ்யா உன் புருஷனுக்கு உன்னோட வாழ கொடுத்து வைக்கல என கோபப்பட பக்கத்திலேயே நிற்கும் திரு குற்ற உணர்ச்சியில் தவிக்கிறான். </p><p>

அதன் பிறகு இரவு மகா கையில் ஏற்பட்ட காயத்தால் சாப்பிட முடியாமல் தவிக்க அப்போது கீழே வந்த திரு அவளுக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறான். கவிதா இதைப் பார்த்து அனைவரையும் கூட்டி பிரச்சனை செய்ய அம்பிகா உன் மனசுல அழுக்கு இருக்கு அதனால தான் உனக்கு பார்க்கிறதெல்லாம் தப்பா தெரியுது.. மகா இடத்தில யாராக இருந்தாலும் என் பையன் இதுதான் செஞ்சிருப்பான் என திருவுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறாள். 

பிறகு அம்பிகாவே மகாவிற்கு சாப்பாடு ஊட்டி விட மகா எமோஷனல் ஆகிறாள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/631d2f6a-c4e3-4a1c-9504-0c1ee6c44851/26-6aa280fb8b5f5.webp' /></p><p> </p><p>இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய திருமாங்கல்யம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
ராதா கிருஷ்ணனாக மாறிய அர்ஜுன், சாமந்தி.. அரசிக்கு காத்திருந்த அதிர்ச்சி - சாமந்தி இன்றைய எபிசோட் அப்டேட் 

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சாமந்தி. </p><p>இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமந்தி கிருஷ்ண ஜெயந்திக்கான ஏற்பாடுகளை செய்து முடித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, சாமந்தி மகேந்திரன் இடம் சென்று ஐயா எல்லா ஏற்பாடும் ரெடி போட்டோ மட்டும் வரணும் என்று சொல்ல மகேந்திரன் கோடீஸ்வரனுக்கு போன் செய்து போட்டோ எங்கே என்று கேட்க அவன் காரில் உட்காந்து வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டு எங்கு தேடியும் போட்டோ கிடைக்கவில்லை என்று சொல்கிறான்.</p><p> 

இதனால் மகேந்திரன் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க சாமந்தி நீங்க ஃப்ரீயா விடுங்க நான் பார்த்துக்குறேன் என்று சொல்கிறாள்‌. அதன் பிறகு சாமந்தி அர்ஜுனை சந்தித்து டிரைவர் தம்பி டிரைவர் தம்பி என கெஞ்சி கேட்கிறாள். 

அடுத்ததாக அரசியின் தோழிகள் வீட்டுக்கு வர நடு வீட்டில் ராதாகிருஷ்ணன் பெரிய சிலையாக நிற்க அதைப் பார்த்து வியப்படைகின்றனர். அப்போது மகேந்திரன் அது சிலையில்ல போட்டோ கிடைக்காத காரணத்தினால் அர்ஜுனும் சாமந்தியும் அப்படி வேஷம் போட்டு நிற்பதாக சொல்ல அரசி டென்ஷன் ஆகிறாள். 

ஆனால் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருக்கிறாள். </p><p>ராதாகிருஷ்ணன் ஆக இதுவரை காதலுடன் ஒருவரை பார்த்துக் கொள்ள இதை வந்தவர்கள் போட்டோ எடுத்து மகிழ்கின்றனர். 

பிறகு அனைவரும் சாப்பிட உட்கார ராதா கிருஷ்ணனையும் அழைக்க இவர்களும் அவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட ஈஸ்வரி இதை வைத்து சாமந்தியை மிரட்ட சாமந்தி அவசரப்பட்டோமோ என பதறுகிறான். 

பிறகு அரசியின் தோழிகள் அர்ஜுன் சாமந்தியுடன் போட்டோ எடுத்துக் கொண்டு கிளம்ப அரசி மிகுந்த கோபத்துடன் வீட்டுக்குள் வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சாமந்தி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.</p>]]></content>
            <updated>2026-09-10T10:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சூர்யா, அஜித் இவங்க எல்லாரையும்விட என் வாழ்க்கை வந்த ஒருத்தன்!! ஆர்த்தி ரவி ஆதங்கம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/he-deserves-an-acting-oscar-aartis-cryptic-post-1789032598"></link>
            <id>https://viduppu.com/article/he-deserves-an-acting-oscar-aartis-cryptic-post-1789032598</id>
            <summary type="text">நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி வழக்கு தொடர்ந்தார். இதில் தனக்கு விருப்பமில்லை என்று தன் தரப்பு நியாயத்தை கூறினா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி வழக்கு தொடர்ந்தார். இதில் தனக்கு விருப்பமில்லை என்று தன் தரப்பு நியாயத்தை கூறினார் ஆர்த்தி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/bd5bdd5c-f956-4c9e-8736-27bc1b064fb7/26-6aa2789995bea.webp' /></p><p> </p><p>இதுதொடர்பான விசாரணை சமீபத்தில் நடந்தநிலையில், ஆர்த்தி - ரவி மோகனுக்கு விவாகரத்து வழங்கியதோடு, மாத ஜீவனாம்சம் தொகை ரவி, ஆர்த்திக்கு கொடுக்க வேண்டும் என்று பிள்ளைகளை ரவியை சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.</p><p> இதற்கிடையில் ரவி மோகன், கெனிஷா என்ற பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் சம்பவமும் பரவ, கெனிஷா எல்லாத்தில் இருந்து விலகி மீண்டும் ரவி மோகன் பக்கம் வந்தார். ரவி மோகன் இயக்கி வரும் படத்திற்கும் கெனிஷா இசையமைப்பாளராக பணியாற்றியும் வருகிறார்.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9cc21f2f-d509-4615-bec3-6e8fe4a20915/26-6aa2789a49325.webp' /></p><p>
இந்நிலையில் ஆர்த்தி ரவி சமீபத்திய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், சூர்யா, அஜித், விக்ரம், கமல் இவங்க எலலாரையும் விட என் லைஃப்-ல வந்த ஒருத்தன் நடிச்சானே நடிப்பு, ஆஸ்கர் ஆவார்ஸ்-ஏ குதுகலம்டா என்று பதிவிட்டுள்ளார்.&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-10T09:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ..அடுத்த சாரி எப்போன்னு கேட்டு கலாக்கும் ப்ளூ சட்டை மாறன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/blue-sattai-maran-asks-when-is-the-next-sorry-bro-1789030394"></link>
            <id>https://viduppu.com/article/blue-sattai-maran-asks-when-is-the-next-sorry-bro-1789030394</id>
            <summary type="text">தமிழ்நாடு சட்டப்பேரையில் சில நாட்களுக்கு முன் விஜய் பதிலுரை அளித்தார். அப்போது, திமுகவை அட்டாக் செய்ய சர்க்காரியா கமிஷன் அறிக்கை, அமலாக்கத்துறை எழுதிய...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ்நாடு சட்டப்பேரையில் சில நாட்களுக்கு முன் விஜய் பதிலுரை அளித்தார். அப்போது, திமுகவை அட்டாக் செய்ய சர்க்காரியா கமிஷன் அறிக்கை, அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தை எல்லாம் வாசித்து காண்பித்தார். </p><p>அதுமட்டுமின்றி மிசாவில் முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் கதாகி, அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் உடைந்த தாடையை கிண்டல் செய்யும் விதமாக உடல்மொழியையும் வெளிப்படுத்தி இருந்தார். அவரது அந்த செய்கை பலரையும் அதிருப்தியை ஏற்படுத்தி கண்டனத்திற்குள்ளானது.</p><p></p><h2>விஜய் விளக்கம்</h2><p> இதுகுறித்து விஜய் விளக்கத்தில், சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கொரிக்கையில், என் பதிலுரையின் இடையே என்னுடைய உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எந்த வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.</p><p> ஆகவே தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்தும் செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். </p><p>இதற்கு முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒரு நீண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.</p><p></p><p> </p><h2>தம்பி விஜய்</h2><p>அதில், தம்பி விஜய், நீங்கள் முதலமைச்சரானப்பின் என் வீட்டு வந்தீர்கள், நான் உங்கள் கரம் பற்றி அழித்துச்சென்றேன். அப்போது என்னிடம், தேர்தல் பரப்புரையில் உங்களை அளவுக்கதிமாக விமர்சித்துவிட்டேன், ஐ அம் சாரி சாரி என்று சொன்னீர்கள்.</p><p> உடனே நான், அதெல்லாம் நான் மனதில் வைத்து கொள்ளவில்லை பிரதர், இப்போது நீங்கள் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், யாரைப்பற்றி பேசும்போதும் அந்த கண்ணியத்தோடு பேசுங்கள் என்று சொன்னேன். அதையெல்லாம் நீங்கள் மறந்துவிட்டீர்கள் போல, சட்டப்பேரவைக்கு என்று ஒரு மாண்பு இருக்கிறது. அதை மனதில் வைத்துக்கொண்டு பேசுங்கள். முதலமைச்சர் என்ற பொறுப்பை உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும் என்று கூறி, தற்போதைய ஆட்சி ரீல்ஸ் ஆட்சி என்றும் விமர்சித்துள்ளார். </p><p>இதனை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், விஜய் குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவை பகிர்ந்து, சாரி மட்டும் சொன்னா போதுமா சார்? என ஸ்டாலினை கேட்ட விஜய், இதுவரை இரண்டு முறை ஸ்டாலினியிடம் சாரி கேட்டுள்ளார். அடுத்த சாரி எப்போது வரும் ப்ரோ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.</p><p><blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">விஜய் குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ. <br><br>&#39;சாரி மட்டும் சொன்னா போதுமா சார்? &#39; என ஸ்டாலினை கேட்ட விஜய்..<br><br>இதுவரை இரண்டு முறை ஸ்டாலினிடம் சாரி கேட்டுள்ளார்.<br><br>அடுத்த சாரி எப்ப வரும் ப்ரோ?<br><br> <a href="https://t.co/m61gx5ir5g">pic.twitter.com/m61gx5ir5g</a></p>&mdash; Blue Sattai Maran (@tamiltalkies) <a href="https://x.com/tamiltalkies/status/2097865741622292965?ref_src=twsrc%5Etfw">September 10, 2026</a></blockquote> <script async src="https://platform.x.com/widgets.js" charset="utf-8"></script></p>]]></content>
            <updated>2026-09-10T08:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரிஷ்யம் பட நிகழ்ச்சியில் உச்சக்க கிளாமரில் வந்த நடிகை ஸ்ரேயா சரண்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/shriya-saran-drishyamtheconclusion-trailer-launch-1789027707"></link>
            <id>https://viduppu.com/article/shriya-saran-drishyamtheconclusion-trailer-launch-1789027707</id>
            <summary type="text">இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ரேயா சரண். இவர் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித...</summary>
            <content type="html"><![CDATA[<p>இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ரேயா சரண். இவர் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
</p><p>
2018ஆம் ஆண்டு Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகள் உள்ளார்.

திருமணத்திற்கு பின்பும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என தனக்கு பிடித்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.</p><h2>கிளாமர்</h2><p>

இந்நிலையில், இந்தியின் திரிஷ்யம் தி கான்குளுஷன் படத்தில் அஜய் தேவ்கன்னுடன் நடித்துள்ளார். படம் அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் லான்ச் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரேயா சரண், உச்சக்கட்ட கிளாமர் ஆடையணிந்து வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-10T08:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[லீக்கான அபிராமி வெங்கடாசலத்தின் சப்ஸ்கிரிப்ஷன் போட்டோ!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/abhirami-subscription-leaked-photos-controversy-1789025793"></link>
            <id>https://viduppu.com/article/abhirami-subscription-leaked-photos-controversy-1789025793</id>
            <summary type="text">2018ல் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் சித்ரா வினோதன் என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் தான் மாடல் நடிகை அபிராமி வெங்கடாசலம். பிக்பாஸ...</summary>
            <content type="html"><![CDATA[<p>2018ல் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் சித்ரா வினோதன் என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் தான் மாடல் நடிகை அபிராமி வெங்கடாசலம். பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு 56 நாட்களுக்கு பின் எவிக்டாகி வெளியேறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/62d2a1f4-79bb-4314-945f-4b3da4f3dfcc/26-6aa25e04e4ef3.webp' /></p><p>
</p><p>
பிக்பாஸ் அல்டிமேட் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். அதன்பின் வெப் தொடர்களில் நடித்தும் வரும் அபிராமி, அனந்தா, DVK உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
</p><p>இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி, இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷன் பக்கத்தில் கிளாமர் பதிவுகளை பதிவுட்டு வருகிறார். </p><h2>லீக்</h2><p>சமீபத்தில் ப்ஸ்கிரிப்ஷனில் எல்லைமீறிய புகைப்படத்தை அபிராமி பகிர்ந்ததை இணையத்தில் நெட்டிசன்கள் லீக் செய்தனர். தற்போது இன்னும் ஷாக்காகும் விதமாக கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.</p>]]></content>
            <updated>2026-09-10T07:15:00+00:00</updated>
        </entry>
    </feed>
