<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Gossip News - Viduppu.com | Tamil Cinema News | Tamil TV News | Kollywood Tamil News | Photo | Video | Viduppu.com</title>
    <subtitle type="html"><![CDATA[Viduppu.com  Provides all latest Cinema news, breaking news, TV News, video, audio, photos, entertainment and other cinema news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <id>https://viduppu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/vp/img/logo.png</logo>
            <updated>2026-07-23T18:46:01+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[IVF மூலம் குழந்தை பிறக்க 1000 ஊசிக்கு மேல் போட்டுக்கொண்டேன்!! நடிகை தேஜஸ்வினி...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/000-injections-for-the-sake-of-a-child-tejaswini-1784816036"></link>
            <id>https://viduppu.com/article/000-injections-for-the-sake-of-a-child-tejaswini-1784816036</id>
            <summary type="text">தேஜஸ்வினி கோலாபுரேபாலிவுட் நடிகை தேஜஸ்வினி கோலாபுரே, நடிகர் பங்கஜ் சரஸ்வத் என்பவரை 2007ல் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்குப்பின்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>தேஜஸ்வினி கோலாபுரே</h2><p>பாலிவுட் நடிகை தேஜஸ்வினி கோலாபுரே, நடிகர் பங்கஜ் சரஸ்வத் என்பவரை 2007ல் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்குப்பின் 2015ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை நீண்ட போராட்டத்திற்குப்பின் பிறந்தது. தன்னுடைய பெண் குழந்தை எப்படி பிறந்தது குறித்து ரியாலிட்டி ஷோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/106c6879-c2a5-45a6-92fe-e6614c464f44/26-6a6221a729d8d.webp' /></p><p> அதில் நான் 5 முறை IVF சிகிச்சை செய்துகொண்டேன். அதைப்பற்றி நான் மிகவும் வெளிப்படையாக பேசுவேன், அதை செய்யும்போது நான் மிகவும் கஷ்டப்பட்டேன். IVF சிகிச்சை என்பது மிகவும் கடினமான ஒரு செயல்முறை. முதல் இரண்டு முறை கடினமாக இருக்கும், மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது முறை சரியாகிவிடும். மருத்துவமனைக்கு சென்று அந்த ஊசிகலை போட்டுக் கொள்வதற்கே நீங்கள் மனதளவில் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும். இது மிகவும் வேதனையான ஒரு செயல்முறை. </p><p>நான் என் வாழ்க்கையில் பிற்பகுதியில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன். என் அறிவுரை என்னவென்றால், தயவு செய்து 35 வயதுக்கு முன்பே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். நான் தாமதமாக குழந்தை பெற்றுக்க்கொண்டது நிச்சயமாக உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் என்னை பாதித்தது. நன் அப்போது இருந்ததுக்கும் இப்போது இருப்பதற்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. மனதளவில் நான் மிகவும் வலிமையானவள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/106c6879-c2a5-45a6-92fe-e6614c464f44/26-6a6221a729d8d.webp' /></p><p> </p><p>உடல்ரீதியாக 1000க்கும் மேற்பட்ட ஊசிகள் எடுத்துக் கொண்டேன். இதனால் உடல் மாறிவிட்டது. உங்கள் கர்ப்பம் பாசிட்டிவாக இருந்தால் அவர்கள் நிறுத்துக்கிறார்கள். நான் IVF சிகிச்சை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள 5 முறை முயற்சித்தேன். இதில் இரு முறை கருச்சிதைவு ஏற்பட்டது. 5வது முறையாகத்தான் எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது என்று கூறியிருக்கிறார் தேஜஸ்வினி.</p>]]></content>
            <updated>2026-07-23T15:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அட்ஜஸ்ட் செய்ய சொன்னாலும் கேட்கமாட்டார்!! கணவரை பற்றி நடிகை நீலிமா ராணி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/neelima-rani-interesting-share-about-her-husband-1784814556"></link>
            <id>https://viduppu.com/article/neelima-rani-interesting-share-about-her-husband-1784814556</id>
            <summary type="text">நீலிமா ராணிதமிழ் படங்களிலும் சீரியல்களிலும் நடித்து பிரபலமான நடிகை நீலிமா ராணி, தன்னைவிட அதிக வயதுடைய இசைவாணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திரும...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நீலிமா ராணி</h2><p>தமிழ் படங்களிலும் சீரியல்களிலும் நடித்து பிரபலமான நடிகை நீலிமா ராணி, தன்னைவிட அதிக வயதுடைய இசைவாணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ஒருசில படங்களில் நடித்து வரும் நீலிமா, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, காதல் திருமணம் குறித்து பேசியுள்ளார்.</p><p></p><p> அதில், அவர் எனக்கு கணவராகக் கிடைத்தது நான் செய்த மிகப்பெரிய புண்ணியம். எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் என்றே சொல்வேன். அவர் ஒரு மனிதராக வாழக்கூடிய ஒரு சித்தர் என்றுகூட நான் சொல்வேன். ஏனென்றால் அவருக்குள் அவ்வளவு பொறுமை, உண்மை, நேர்மை இருக்கிறது. ஒரு மனிதாரால் இவ்வளவு உண்மையாக இருக்க முடியுமா என்று நானே பலமுறை ஆச்சரியப்பட்டு யோசித்துள்ளேன். </p><h2>காதல் திருமணம்</h2><p>ஒரு இடத்தில் சும்மா சிரித்துப் பேசினால், அந்த இடத்தில் நமக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்துவிடும் என்றால் கூட, அவர் அதை செய்யமாட்டார். எனக்கு அப்படி வரும் வாய்ப்பு தேவையில்லை என்று கூறுவார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/7a7698c7-5e58-4129-9f81-3d0e212a2470/26-6a621bde8411b.webp' /></p><p>ஒருவரிடம் சும்மா அவர்கள் முகத்திற்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து பேசுங்கள் என்று நான் சொன்னால்கூட, எதற்காக நாம் அப்படி போலியாக பேச வேண்டும் என்று கூறுவார். மற்றவர்களிடம் மட்டுமில்லை என்னிடமும் அவர் அப்படித்தான் நடந்து கொள்வார். </p><p>அவருக்கு சரி என்றால் சரி, தப்பு என்றால் தப்பு அவ்வளவு தான். அவர் ரொம்ப நேர்மையானவராகவும், மிகவும் அழகான மனம் கொண்ட மனிதர். எனக்கும் அவருக்கும் 10 வயது வித்தியாசம், பலர் எங்களை பார்த்து கேலி கூட செய்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அந்த பக்குவம் தான் எங்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முக்கிய காரணம் என்று நீலிமா ராணி தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-23T14:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இந்தியில் தமன்னாவிடம் உடலை வர்ணித்து பேட்டி!! மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/annu-kapoor-apologises-tamannaah-milky-beauty-1784811786"></link>
            <id>https://viduppu.com/article/annu-kapoor-apologises-tamannaah-milky-beauty-1784811786</id>
            <summary type="text">தமன்னா -&amp;nbsp;அன்னு கபூர்நடிகை தமன்னா சமீபத்தில் நடித்த ’ஆஜ் கி ராத்’ பாடல் நாடு முழுவதும் மிகப்பெரியளவில் ஹிட்டானது. அப்பாடலில் தமன்னாவின் நடனமும் கி...</summary>
            <content type="html"><![CDATA[<h2>தமன்னா -&nbsp;அன்னு கபூர்</h2><p>நடிகை தமன்னா சமீபத்தில் நடித்த ’ஆஜ் கி ராத்’ பாடல் நாடு முழுவதும் மிகப்பெரியளவில் ஹிட்டானது. அப்பாடலில் தமன்னாவின் நடனமும் கிளாமர் தோற்றமும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. பலரும் சோசியல் மீடியாகளில் அப்பாடலை கொண்டாடிய நிலையில் நடிகர் அன்னு கபூரும் அப்படம் குறித்து பேசியிருந்தார். </p><p>சமீபத்தில் அளித்த பேட்டியில், அந்த பாடலை பார்த்தப்பின் தமன்னாவின் ரசிகனாகவே மாறிவிட்டேன். அவரது அழகையும் உடலமைப்பும் பார்த்து வியந்துபோனேன் என்று கூறியிருந்தார். அதோடுமட்டுமல்லாமல் தமன்னாவை பால் போன்ற மேனி கொண்டவர் என இந்தியில் சரிச்சைக்குரியபடி பேசினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/153de83b-646a-47e8-bdff-e6bc049c23ce/26-6a62110c3b05a.webp' /></p><p> </p><p>மேலும் இந்த பாடலை பார்த்த இளைஞர்களுக்கு தூக்கம் வரவில்லை என்று தமன்னா முன்பு கூறிய கருத்து பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அன்னு கபூர், அவரது பால் போன்ற மேனியும் முகமும் இளைஞர்கள் நிம்மதியாக தூங்க உதவுகிறது.</p><p> அது ஒரு நல்ல விஷயம், அவருடைய அனைத்து ஆசைகளையும் கடவுள் நிறைவேற்றட்டும், என்னுடைய ஆசிகள் எப்போது அவருக்கு உண்டு என்று கூறியிருந்தார். இது பலருக்கும் பிடிக்காமல் போக, உங்களுக்கு மகள்களும் பேத்திகளும் இருக்கிறார்கள். ஒரு நடிகையை பற்றி இப்படியா பேசுவீர்கள் என்று விளாசினர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/04a7ee86-2980-4711-88c2-75aff22a4c52/26-6a62110ce16f7.webp' /></p><p> </p><h2>மன்னிப்பு</h2><p>இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அன்னு கபூர், 300 ஆண்டுகள் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் வாழ்ந்ததன் தாக்கம் இன்னும் நம்மிடம் இருக்கிறது. ஆங்கிலத்தில் ஒருவரை பாராட்டினால் அது நாகரிகமாக தெரிகிறது. அதே கருத்தை இந்தியில் சொன்னால் மட்டும் தவறாக பார்க்கிறார்கள்.</p><p> அரசியல் ரீதியாக நமக்கு 1947ல் சுதந்திரம் கிடைத்தது, ஆனால் மனரீதியாக இன்னும் ஆங்கிலேயர்களின் தாக்கத்திலிருந்து முழுமையாக வெளிவரவில்லை. </p><p>தமன்னாவை ஆங்கிலத்தில் மில்க் ப்யூட்டி அல்லது மில்கி பாடி என்று சொன்னால் யாரும் கேள்வி கேட்பதில்லை, ஆனால் அதையே இந்தியில் தூதியா பதன் என்று சொன்னால் தவறாக எடுத்துக் கொள்கிறார்கள். </p><p>நான் பேசிய வார்த்தைகள் யாருடைய மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தமன்னா எப்போதும் மகிழ்ச்சியாக, நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-23T13:15:00+00:00</updated>
        </entry>
    </feed>
