<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Gossip News - Viduppu.com | Tamil Cinema News | Tamil TV News | Kollywood Tamil News | Photo | Video | Viduppu.com</title>
    <subtitle type="html"><![CDATA[Viduppu.com  Provides all latest Cinema news, breaking news, TV News, video, audio, photos, entertainment and other cinema news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <id>https://viduppu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/vp/img/logo.png</logo>
            <updated>2026-08-22T09:33:33+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பாலினப்பாகுபாடு, பெண் வெறுப்பு.. தீபிகா படுகோன் மீது தயாரிப்பாளரின் குற்றச்சாட்டு விவாகரம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/allegations-against-deepika-new-controversy-1787389576"></link>
            <id>https://viduppu.com/article/allegations-against-deepika-new-controversy-1787389576</id>
            <summary type="text">தீபிகா படுகோன் -&amp;nbsp;ஸ்பிரிட்ஸ்பிரிட் என்ற படத்தை பிரபாஸ் கதாநாயகனாக வைத்து இயக்கி வருகிறார் சந்தீப் ரெட்டி வங்கா. படத்தின் நாயகியாக முதலில் தீபிகா ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>தீபிகா படுகோன் -&nbsp;ஸ்பிரிட்</h2><p>ஸ்பிரிட் என்ற படத்தை பிரபாஸ் கதாநாயகனாக வைத்து இயக்கி வருகிறார் சந்தீப் ரெட்டி வங்கா. படத்தின் நாயகியாக முதலில் தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், தீபிகா படுகோன் ஸ்பிரிட் படத்தில் இருந்து விலகினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e68b512e-9e7c-4c4f-8d48-ed44831d9595/26-6a89668ac6c19.webp' /></p><p> </p><p>அதற்கு காரணங்கள் பல கூறப்பட்ட நிலையில் தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா விளக்கத்தை சமீபத்திய பேட்டியில் கொடுத்தார். தீபிகாவின் சம்பள எதிர்பார்ப்பு பேச்சுவார்த்தையில் முக்கிய விஷயம் இருந்தது. அதேபோல், ஷூட்டிங்கில் அவர் செலவிடும் நேரம் குறித்தும் சில நிபந்தனைகள் இருந்தது. </p><p>படத்தின் வெளியீட்டுக்குப்பின் கிடைக்கும் லாபத்தில் 10 சதவீதத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தார். தெலுங்கு வசனங்களை பேசுவது தொடர்பான விவகாரமும் அவர் படத்திலிருந்து விலகியதற்கான காரணம் என்று கூறியிருந்தார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/eecb4be9-e965-477f-9d29-9b8bb69781d6/26-6a89668b79bcc.webp' /></p><p>இந்நிலையில், பிரணய் ரெட்டியின் இந்த குற்றச்சாட்டுக்கு தீபிகா எந்த விளக்கத்தையும் கொடுக்காத நிலையில் சோசியல் மீடியாவில் பகிரப்பட்ட ஒரு பதிவினை தீபிகா படுகோன் லைக் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. </p><p>அதாவது ஒரு பெண், திரைப்பட ஒப்பந்தத்தை நிராகரித்ததற்கு தீபிகா மீது இவ்வளவு கோபம் காட்டப்படுவது ஆண் அகபாவத்தின் வெளிப்பாடு என்று பதிவிட்டுள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c30a4de7-89de-489a-a8b3-1964ff8b2813/26-6a89668c2baed.webp' /></p><p>ஆண் இதுபோன்ற கோரிகையை கூறினால், அதை தொழில்முறை அணுகுமுறை என்று எடுக்கும் சிலர், பெண் அதேபோன்று கேட்டால் அவர்களை அடம்பிடிப்பவர்கள் போன் சித்தரிப்பதா? இது தொழில்முறை சார்ந்த பிரச்சனை என்பதைவிட பாலினப்பாகுபாடு, பெண் வெறுப்பு என்று குறிப்பிட்டுள்ளார் அந்த பெண். </p><p>இதற்கு நடிகை தீபிகா படுகோன் லைக் செய்திருக்கிறார். பிரணய் ரெட்டி வங்காவின் இந்த குற்றச்சாட்டுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளாரோ தீபிகா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.</p><p></p>]]></content>
            <updated>2026-08-22T09:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[இலங்கை பீச்சில் கிளாமர் ஆடையில் நடிகை நிவிஷா!! புகைப்பட கலெக்ஷன்ஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nivisha-k-recent-srilanka-outing-beach-photoshoot-1787385977"></link>
            <id>https://viduppu.com/article/nivisha-k-recent-srilanka-outing-beach-photoshoot-1787385977</id>
            <summary type="text">நிவிஷாசன், விஜய் சீரியல்களில் மாறி மாறி நடித்து வந்தவர் நிவிஷா. அறந்தாங்கியில் பிறந்து சினிமா மீது உள்ள ஆசையால் சென்னை வந்து நடிக்க தொடங்கியவர் நிவிஷா...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நிவிஷா</h2><p>சன், விஜய் சீரியல்களில் மாறி மாறி நடித்து வந்தவர் நிவிஷா. அறந்தாங்கியில் பிறந்து சினிமா மீது உள்ள ஆசையால் சென்னை வந்து நடிக்க தொடங்கியவர் நிவிஷா.
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/0b971cbf-40e4-42e6-b50f-86d2a1da0c0a/26-6a8958846e470.webp' />]</p><p>
அவளுக்கு என்ன அழகிய முகம் படத்தில் நடித்தவர் சின்னத்திரை பக்கம் மீண்டும் வந்து தெய்வமகள், பொன்னூஞ்சல், ஓவியா, கங்கா, யாரடி நீ மோகினி, முள்ளும் மலரும், ஈரமான ரோஜாவே போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார் நிவிஷா.
</p><p>
இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நிவிஷா, இலங்கைக்கு சென்று அங்குள்ள பீச்சில் கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-22T08:30:25+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தை பிறந்தப்பின் எல்லாமே தெரிந்தது!! முன்னாள் கணவர் பற்றி நடிகை கங்கனா ஓபன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kangna-sharma-reveals-marriage-secret-husband-past-1787384533"></link>
            <id>https://viduppu.com/article/kangna-sharma-reveals-marriage-secret-husband-past-1787384533</id>
            <summary type="text">கங்கனா சர்மாபாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கங்கனா சர்மா, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து பேட்டியொன்றில் பகிர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கங்கனா சர்மா</h2><p>பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கங்கனா சர்மா, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். குறிப்பாக தான் திருமணம் செய்துகொண்ட நபர் குறித்து உண்மையான ரூபத்தை தாமதமாக தெரிந்துகொண்டது குறித்தும் பேசியுளளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5f5a9649-a947-4369-9ca4-94701338f7c3/26-6a8952d7603db.webp' /></p><p>அதில், கடந்த 2019ல் யோகேஷ் என்பவரை சந்தித்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. யோகேஷ் வெளிநாடுகளிலுள்ள ஆன்மீகத் தலங்களுக்கு தன்னை அழைத்துச் சென்றார். ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை. ஒரு தீவில் வைத்து யோகேஷ் என்னிடம் காதலை வெளிப்படுத்தியப்பின் அவரை திருமணம் செய்துகொண்டேன். </p><p>திருமண வாழ்க்கை தொடங்கிய சில மாதங்களில் ஒரு அதிர்ச்சியை தான் சந்தித்தேன். திருமணமாகி சுமார் இரண்டரை மாதங்களில் தான் கர்ப்பமானதாகவும், அந்த காலக்கட்டத்தில் யோகேஷ் தன்னை தன்னுடைய தாயார் வீட்டில் கொண்டு சென்றுவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ac609ada-0caf-40c0-81fd-8013f858792d/26-6a8952d814cf2.webp' /></p><p> </p><p>பின் கங்கனாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்தப்பின் தான் தன்னுடைய கணவர் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் தெரிந்தது. தனக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டபோது யோகேஷுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தது என்று பிரசவத்திற்கு பின் தான் தெரிந்து கொண்டேன்.</p><h2>முதல் மனைவி</h2><p> அதன்பின் அவர் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்தார் அதுமட்டுமில்லாமல், யோகேஷுக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருந்ததது, அதன்பின் தான் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து இறுதியில் யோகேஷிடமிருந்து விவாகரத்து பெற்றதாகவும் கங்கனா தெரிவித்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f1082c76-6fee-48e1-806a-1c0c21a75a42/26-6a8952d8ba954.webp' /></p><p> </p><p>மேலும், திருமணமும், கர்ப்பமும் தன்னுடைய வாழ்க்கையின் மிகவும் மோசமான காலகட்டமாக இருந்தாலும் அதுவே தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததாக கங்கனா சர்மா தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-22T07:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[முதலிரவு காட்சி..என் மகன் திட்டிட்டான்!! இயக்குநரிடம் மன்னிப்பு கேட்ட சுப்பிரமணியபுரம் நடிகை தனம்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/subramaniapuram-open-scene-of-the-first-night-1787380634"></link>
            <id>https://viduppu.com/article/subramaniapuram-open-scene-of-the-first-night-1787380634</id>
            <summary type="text">சுப்பிரமணியபுரம்தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளியாகி பல வருடமானாலும் அதில் நடித்த சில கதாபாத்திரங்களும் காட்சிகளும் இன்றும் பேசப்பட்டு வரும். அப்படி ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சுப்பிரமணியபுரம்</h2><p>தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளியாகி பல வருடமானாலும் அதில் நடித்த சில கதாபாத்திரங்களும் காட்சிகளும் இன்றும் பேசப்பட்டு வரும். அப்படி 2008ல் வெளியான சுப்பிரமணியபுரம் படத்தின் முக்கிய கல்ட் கிளாசிக் பட காட்சிகள் இன்றும் கொண்டாடப்படும். அப்படி மைக் செட் ராசாத்தி ரோலில் நடித்த திண்டுக்கல் தனம், அப்படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4a8d8006-0960-4004-b883-3fc41558e532/26-6a89439cb809e.webp' /></p><p>அவர் கூறுகையில், அப்படத்தில் நடிக்க அலெக்ஸ் என்பவரிடம் இருந்து எனக்கு போன் கால் வந்தது. உடனடியாக பாரதிபுரம் வாங்க என்று சொன்னதும் ஒரு சுமோ காரில் சென்றுள்ளார். அப்போது தாடியுடன் ஒருவர் தனம் இறங்கி வருவதையே பார்த்துக் கொண்டிருந்தாராம். அவரை பார்த்ததும் இவர் என்ன கேடி மாதிரி இருக்கிறார் என்று தனத்திற்கு தோன்றியுள்ளது. அதன்பின் இவர் தான் இயக்குநர் சசிகுமார் என்று பக்கத்தில் இருந்தவர் கூறியிருக்கிறார். </p><p>அப்போது மனசில் சின்ன நெருடல் இருந்துள்ளது. முதல் நாளிலேயே திருவிழா காட்சிகள் என்பதால் அடுத்த நாளே வாங்க என்று கூறி 10 நாட்கள் சூட்டிங்கில் தனம் கலந்து கொண்டிருக்கிறார். கேமராவை பார்த்து சிரிக்க சொல்லி இருக்கிறார்கள், ஆனால் படத்தில் தனம் நாட்டாமையை பார்த்து சிரிப்பதுபோல் மாற்றி வைத்துவிட்டார்களாம். அதேபோல் தோட்டம் கொண்ட ராசாவே, சூடிக்கொண்ட ராசாத்தி என்ற பாடல் பின்னனி காட்சி படமாக்கப்பட்ட விதத்தை பற்றியும் தனம் கூறியுள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b92bee87-22c8-4d0c-8415-69020fa443f8/26-6a89439d6a395.webp' /></p><p> </p><h2>முதலிரவு காட்சி</h2><p>ஆரம்பத்தில் நன் எந்த கேரக்டரில் நடிக்கிறேன் என்று எனக்கு தெரியாது. அந்த ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்த ஒருசிலர் என்னை ராசாத்தி ராசாத்தி என்று கூப்பிடுவாங்க, அப்போது எதற்கு அப்படி கூப்பிடுறாங்கன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன், ஆனால் பிறகுதான் எனக்கு விஷயமே தெரிந்தது. எனக்கு ஊர் தலைவருயுடன் முதலிரவு காட்சி ஒன்று இருந்தது. அதில் நான் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். </p><p>எனக்கு இந்த நடிப்பு போதும், இப்படி எல்லாம் என்னால் முடியவே முடியாது என்று சொன்னேன். அங்கு என்னோட சொந்தக்காரங்க எல்லோரும் வெளியில் இருந்தாங்க, எல்லோரும் நான் நடிக்க போறதை பார்க்கிறதுக்கு வந்துருக்காங்க, ஆனால் நான் நடிக்க போறது இப்படிப்பட்ட காட்சி என்று தெரிஞ்சா என்ன சொல்லுவாங்க, நமக்குன்னு ஒரு மரியாதை இருக்கு, நாம போய் இப்படி நடிக்கணுமா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1d18e486-6d79-43d1-9281-42d01a6d55e4/26-6a89439e1f92f.webp' /></p><p> </p><p>அப்போது கஞ்சா கருப்பு வந்து என்னை திட்டுனாரு. இது எப்படிப்பட்ட படம் தெரியுமா? உனக்குன்னு ஒரு அடையாளம் கிடைக்கும். அதை நீயே கெடுத்துக்காத என்று சொன்னாரு. அந்நேரத்தில் என் மகனே கோபப்பட்டுட்டான். அம்மா நீ நடிக்கிறதுக்கு வந்துட்டு அந்த காட்சியில் நடிக்க மாட்டேன், இதில் நடிக்க மாடேன்னு சொல்றது நல்லாவா இருக்குன்னு திட்டுனான். </p><p>அதற்குமுன் நான் அக்காட்சியில் நடிக்க முடியாதுன்னு சொன்னதும் சசிகுமார் சார் வந்து என்கிட்ட, சமாதானம் பண்ணுனார். சார் என்னால இதுபோல நெகட்டிவாக நடிக்க முடியாதுன்னு சொன்னேன். அப்புறம் மகன் சொன்ன விஷயத்தை கேட்டு எனக்கு சரின்னு பட்டு, அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, பின் அக்காட்சியில் நடித்தேன். ஆனால் அப்பட கேரக்டர் எனக்கு பிறகு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது என்று தனம் கூறினார்.</p>]]></content>
            <updated>2026-08-22T06:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[வெள்ளை நிற சேலையில் தேவதை போல் நடிகை நயன்தாரா.. கலக்கல் போட்டோஷூட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nayanthara-white-saree-photoshoot-1787372324"></link>
            <id>https://viduppu.com/article/nayanthara-white-saree-photoshoot-1787372324</id>
            <summary type="text">தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பான்-இந்தியன் ஸ்டாராக வலம் வருகிறார். அடுத்ததாக ச...</summary>
            <content type="html"><![CDATA[<p>தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பான்-இந்தியன் ஸ்டாராக வலம் வருகிறார். அடுத்ததாக சல்மான் கானுக்கு ஜோடியாக இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.
</p><p>
இதுமட்டுமின்றி மூக்குத்தி அம்மன் 2, Hi என அடுத்தடுத்த பல திரைப்படங்கள் நயன்தாராவின் நடிப்பில் வெளிவரவுள்ளன. இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் டாக்சிக் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
</p><p>
இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை நயன்தாரா. அந்த வகையில், தற்போது வெள்ளை நிற சேலையில் தேவதை போன்ற தோற்றத்தில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். </p><p>

நயன்தாரா வெளியிட்டுள்ள இந்த போட்டோஷூட் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து, இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்:</p>]]></content>
            <updated>2026-08-22T04:19:40+00:00</updated>
        </entry>
    </feed>
