ஆரவ்வின் திருமணத்தால் காதலை மறக்கமுடியாமல் தவித்து வருகிறாரா நடிகை ஓவியா?.. ஷாக்காகும் ரசிகர்கள்

பிரபல தொலைக்காட்சி சேனல் கமல்ஹாசனை வைத்து தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். முதல் சீசனில் கலந்து கொண்ட போது இவருக்கும் ஓவியாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
ஆனால், ஆரவ் சமீபத்தில் கௌதம் மேனன் படத்தில் நடித்து வரும் இளம் நடிகையை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் அனைவரும் பங்கேற்றனர். ஆனால் ஓவியா மட்டும் வரவில்லை.
இதையடுத்து, ஓவியா ஏன் வரவில்லை என்று ரசிகர்கள் சுஜா வருணியின் புகைப்படத்திற்கு கேள்வி கேட்க, அதற்கு சுஜா வருணியும், அவர் பிஸியாக வீட்டிலேயே இருந்திருப்பார் என பதிலளித்திருந்தார்.
இதனால், தன்னுடைய காதலன் திருமணம் குறித்து நிச்சயம் ஓவியா எதையாவது பதிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மறைமுகமாக விமர்சிப்பது போல், இந்த உலகம் மிகவும் ஆபத்தானது. அது தீமை செய்பவர்கள் அல்ல. ஒன்றும் செய்யாதவர்களால் தான் என கூறியுள்ளார்
இவருடைய பதிவைப் பார்த்த ஓவியா ஆர்மி என்ன தலைவி ஆரவ் திருமணத்தால் மனமுடைந்து விட்டீர்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
The world is a dangerous place not because of those who do evil,it’s because of those who look on and do nothing
— Oviyaa (@OviyaaSweetz) September 11, 2020