என்னது கரைய கடந்திருச்சா? துணிய ஊரபோட்டுடவேண்டியது தான்! மழை பரிதாபங்கள்
TNRains
redalart
Chennairains
By Jai
தமிழகத்தில் சில வாரங்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியதால் கொட்டித்தீர்த்த மழையால் வெள்ளக்காடாக மாறியது. அதில் அதிகமாக சென்னையில் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது.
அதை சரிசெய்ய சில நாட்களாகிய நிலையில் மீண்டும் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்ததால் ரெட் அலர்ட் விடப்பட்டது. இதனால் பல பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அறிவித்து வந்தனர்.
இன்று காலை கரையை கடந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழையோடு சென்றதால் ரெட் அலர்ட் வாபஸ் பெற்றனர்.
ஆனால் மழை நினைத்தது போல் பெய்யவில்லை என்று இணையத்தில் நெட்டிசன்கள் மீம்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
