எந்த நடிகையும் செய்ய துணியாத செயல், 3 பேர் கைது, ருக்மிணி அதிரடி
Rukmini Vasanth
By Tony
ருக்மிணி வசந்த் கன்னட திரையுலகின் சென்சேஷ்னல் நடிகையாக வளர்ந்து வருபவர். இவர் நடித்த காந்தாரா சாப்டர் ஒன் படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய புகழை இவருக்கு பெற்று தந்தது.
இந்நிலையில் சமீப காலமாக ஹீரோயின்களை மிக மோசமாக சித்தரித்து டீப் பேக் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவருகிறது. இதை ஒரு சிலர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

பல நடிகர், நடிகைகள் இதை கண்டுக்கொள்ளாமல் கடந்து செல்கின்றனர். ஆனால், ருக்மிணி வசந்தை தவறாக சித்தரித்த நபர்கள் சிலர் மீது ருக்மிணி வசந்த் புகார் கொடுக்க, காவல்துறையினரும் விரைந்து கைது செய்துள்ளனர்.
இந்த நிகழ்வுக்கு ருக்மிணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது, அதோடு இதுபோன்று தான் இனி வரும் காலங்களில் அனைத்து நடிகைகளும் அதிரடியாக முடிவு எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.