3 பிரச்சனையால் நிலைக்குலைந்த சிவகார்த்திகேயன்!! நேரம் பார்த்து ஆப்பு வைக்கும் கமல்..
சினிமா நட்சத்திரங்கள் என்றாலே ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனை ஏற்பட்டு கஷ்டத்தை கொடுக்கும். அப்படி தான் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் நடந்து வருகிறது. குறுகிய காலக்கட்டத்தில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் உயர்ந்து வந்தார். ஆனால் ஒவ்வொரு படமும் வெளியாகும் காலக்கட்டத்தில் பிரச்சனையை சந்தித்து வந்தார். அப்படி 3 பிரச்சனைகளால் சிவகார்த்திகேயன் நிலைக்குலைந்த விசயத்தை பார்ப்போம்.
சமீபத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் நடித்து வரும் சிவகார்த்திகேயனுக்கு தற்போது ஒரு ஆப்பு வந்துள்ளது. அதாவது அப்படத்தின் பட்ஜெட் எதிர்ப்பார்த்ததை விட தற்போது அதிகரித்திருப்பதால் கோபத்தில் இருந்த கமல் சிவகார்த்திகேயனின் சம்பளத்தில் கை வைத்திருக்கிறார். பேசிய தொகையில் ஒரு பகுதியை அப்படியே குறைத்ததால் சிவகார்த்திகேயன் அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பல ஆண்டுகள் தூசித்தட்டப்பட்டு இருந்த அயலான் படம் பொங்கல் அன்று வெளியாகவிருந்த நிலையில், தற்போது படத்தின் முக்கிய காட்சி ஒன்று லீக்காகியுள்ளது. இப்படம் ஓடவே கூடாது என்று சிலர் பார்த்த வேலையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
கடைசியாக வெள்ளப்பாதிப்புக்காக சிவகார்த்திகேயன் 10 லட்சம் தொகையை உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறார். ஆனால் இமான் மனைவி பிரச்சனையால் சிவகார்த்திகேயன் பெயர் டேமேஜ் ஆக, அவர் கொடுத்த விசயமே அப்படியே சைலெண்ட்டாக போயுள்ளது. அதை சரி செய்ய இப்படி செய்தும் வீணாகிவிட்டதே என்று மன உளைச்சலில் இருப்பதாகவும் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.