சமந்தாவிற்கு விவாகரத்தா? கணவருக்கு பிடிக்காமல் செய்த 5 விஷயங்களால் ஏற்பட்ட பிரச்சனை..
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். குறுகிய காலக்கட்டத்தில் இந்த இடத்திற்கு வந்த சமந்தா சமீபத்தில் பேமிலி மேன் 2 என்ற வெப் சீரிஸில் நடித்து சர்ச்சைக்குள்ளானார். அப்படத்தில் நடித்தது முதல் சமந்தாவின் திருமண வாழ்க்கையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவியது.
அதற்கு காரணமாக இருந்தது பேமிலி மேன் வெப் தொடரில் படுமோசமான காட்சிகளில் நடித்ததுதானாம். ஆனால், இதைதொடர்ந்து சமந்தாவின் சில நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட அவருக்கும் கணவருக்கும் விரிசல் ஏற்பட்ட விவாகரத்து வரை சென்றுள்ளதாக செய்திகள் பரவியது. சமந்தாவின் குறிப்பிட்ட 5 செயல்கள் இப்படியான வதந்திகள் வெளியாக காரணமாகியுள்ளது.
முதலாவது பேமிலி மேன் படத்திற்கு பிறகு சமுகவலைத்தளத்தில் இருந்து கணவர் நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை சமந்தா எடுத்துவிட்டு S என்று மாற்றியதோடு நம்பிக்கை என்ற வசனத்தை பதிவிட்டுள்ளார்.
இரண்டாவதாக கணவரின் தந்தை நடிகர் நாகர்ஜுனாவின் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொள்ளாமல் வெறும் சமுகவலைத்தளத்தில் மட்டும் வாழ்த்துக்கள் கூறியுள்ளார் சமந்தா. ஆனால் மாமா என்ற வார்த்தையோடு பதிவினை போட்டுள்ளார்.
மூன்றாவது காரணம் இருவரும் தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதே. சமந்தா பதிவிடும் புகைப்படங்கள் தனிமையில் இருப்பது போன்ற நிலையை காட்டி வருகிறது. சமீபத்தில் தங்களுக்கென ஒரு வீட்டினை வாங்கிய நிலையிலும் சமந்தா தனிமையில் வாழ்ந்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நான்காவதாக சாய்பல்லவி மற்றும் சமந்தா கணவர் இணைந்து நடித்து வந்த லவ் ஸ்டோரி படத்தின் டிரைலர் தான். வாழ்த்துக்கள் கூறி சமந்தா சாய் பல்லவியை மட்டும் டேக் செய்து கணவரை மறந்தோ அல்லது வேண்டுமென்றோ பதிவிடாமல் இருந்தது தானாம்.
கடைசியாக பெண் தோழியுடன் கோவாலிற்கு ட்ரிப் சென்றுள்ளது.
இப்படியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இருவரும் வாய்த்திறந்தோ அல்லது இணைந்து புகைப்படம் எடுத்தோ வெளியிட்டல்தான் இதனை நிறுத்த முடியும் என்கிறார்கள்.