மனைவியோடு ஜனநாயக கடமையை செய்த 6 சினிமா ஜோடிகள்.. கழட்டிவிட்டு சிங்கிளாக வந்த விஜய், அஜித்..
இந்தியா முழுவதும் ஜூன் 1 ஆம் தேதி வரை இந்திய நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. நேற்று தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில் பொதுமக்களும் பிரபலங்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்கள். நேற்று நடந்த தேர்தல் வாக்களிப்பில் நடிகர்கள் பலர் ஜோடியாக வந்து வாக்களித்தனர். அப்படி டாப் ஜோடிகள் யார் யார் ஜோடியாக வந்து வாக்களித்தார்கள் என்பதை பார்ப்போம்.
நடிகர் சிவகார்த்திகேயன் தன் மனைவி ஆர்த்தியுடன் ஜோடியாக காலையிலேயே வந்து வாக்களித்தார். அதன்பின் நடிகர் பிரசன்னா - சினேகா ஜோடியாக வந்து வாக்களித்தனர். நடிகர் ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியுடன் ஜோடியாக வந்தார். இயக்குனர் ஷங்கர் தன் மனைவியுடன் வந்து வாக்களித்தார்.
கடந்த ஆண்டு திருமணம் செய்த நடிகர் அசோக் செல்வன், அவரது மனைவி நடிகை கீர்த்தி பாண்டியன் முதல் முறையாக ஜோடியாக வாக்களித்தனர். இயக்குனர் சுந்தர் சி, தன் மனைவி மற்றும் மகள்களுடன் வந்து ஓட்டுப்போட்டுள்ளார்.
நடிகர் சரத்குமார் தன் மனைவி நடிகை ராதிகாவுடன் ஜோடியாக வந்து ஓட்டுப்போட்டுள்ளார். இப்படி முன்னணி நடிகர்கள் ஜோடியாக ஓட்டுப்போட்ட நிலையில் நடிகர் விஜய் மற்றும் அஜித் சிங்கிள் ஆளாக தனியாக வந்து ஓட்டு போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.