எனக்கும் நிறைய நடந்து இருக்கு.. ஆனால்.. நடிகை சிம்ரன் பகிர்ந்து கொண்ட ரகசியம்...
அந்தகன்
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் இளசுகளின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த நடிகை சிம்ரன், சமீபத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
தற்போது பல பேட்டிகளில் கலந்து கொண்டு பேசி வரும் நடிகை சிம்ரன் பாலியல் வன்முறை பற்றி எமோஷனலாக பகிர்ந்திருக்கிறார்.
பாலியல் வன்முறை
ஒரு பெண்மீது பாலியல் வன்முறை நடத்தப்பட்டால் உடனே ஏன் சொல்லவில்லை என்று கேட்கிறார்கள். அதெல்லாம் ஒரு கேள்வியா? அதை எப்படி உடனே சொல்ல முடியும், நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்று புரிந்துக்கொள்ளவே நேரம் தேவை, யோசித்துத்தான் அதற்கு எதிர்வினை என்ன என்பதை புரிந்துக்கொள்ளமுடியும்.
சின்ன வயதில் இருந்தே இந்தமாதிரியான பிரச்சனைகளை நான் சந்தித்து இருக்கிறேன், ஆனால் என்னால் அதை இப்போது சொல்ல முடியாது.
வார்த்தையாலோ, நடத்தையாலோ என்ன நடந்தாலும் அதை எதிர்த்து போராட வேண்டும், அமைதி காக்கக்கூடாது, அது தவறு என்று சிம்ரன் தெரிவித்துள்ளார்.