நள்ளிரவில் பின்தொடர்ந்து அத்துமீறிய நபர்!! கன்னட பிக்பாஸ் நடிகை திவ்யா வேதனை...
Bigg Boss
Indian Actress
Bengaluru
Actress
By Jai
திவ்யா சுரேஷ்
பிக்பாஸ் கன்னடம் 8 நிகழ்ச்சியில் பங்கேற்று சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் திவ்யா சுரேஷ். ஒருசில படங்களில் நடித்துள்ள திவ்யா, பெண்களுக்கான பாதுகாப்பு எங்கே என்று தனக்கு நடந்த சம்பவத்தால் வேதனையடுத்துள்ளார்.

பெங்களூரு சாலையில் நள்ளிரவில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களையும் தன்னுடைய உறவினர்களையும் பின்தொடர்ந்து அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராமில், பெண்களுக்கான பாதுகாப்பு எங்கே என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பலரும் தங்களின் ஆதரவை அளித்த நிலையில், நடிகை திவ்யா நன்றி தெரிவித்து ஒரு ஸ்டோரியை பகிர்ந்துள்ளார்.