திருமணத்துக்கு முன் 7 வருட ரிலேஷன்ஷிப்!! காதல் ரகசியத்தை முதன் முதலில் உடைத்த ஆதி - நிக்கி கல்ராணி
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நிக்கி கல்யாணி, யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் போன்ற படங்களில் ஜோடியாக நடித்த நடிகர் ஆதியை கடந்த 2022ல் மே மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் படங்களில் நடித்து வரும் நிக்கி கல்ராணி, காதலர் தினத்தன்று கணவர் ஆதியுடன் பேட்டியில் கலந்து கொண்டு காதல் மற்றும் திருமணம் பற்றிய பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.
காதலை எப்படி மறைத்து வைத்தீர்கள் என்று மணிமேகலை கேள்வி கேட்டுள்ளார். மறைத்துலாம் வைக்கவில்லை, காதலிக்கிறோம் என்று ஆர்ட்டிகள் எல்லாம் வந்தது, ஆனால் அதற்கு நான் ரியாக்ஷன் கொடுக்கவில்லை. என்ன செய்யலாம் என்று இருவரும் யோசித்தோம். பதில் சொன்னால் தான் பெரிதாகும், வேண்டாம் என்று நிக்கி சொன்னாள். இருவரும் பிறந்தநாள் பார்ட்டிகளில் எடுத்த போட்டோக்கள் வெளியானதை பார்த்து காதல் செய்திகள் வெளியானது. அதன்பின் தான் இருவரும் திருமண தகவலை அறிவித்தோம்.
எங்கள் குடும்பத்துக்கு தெரியும், இருவரும் நண்பர்கள் தானா என்ற ஒரு சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. ஆனால், அவர்கள் அதுபற்றி எங்களிடம் கேட்கவில்லை. என் குடும்பத்துடன் நிக்கி சீக்கிரமே பழகிட்டாங்க என்று ஆதி கூறியிருக்கிறார். அதற்கு நிக்கி, யாகாவாராயினும் நாகாக்க படத்தின் போதே ஆதி குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தேன். எங்கள் வீட்டுக்கு மேல் தான் ஆதி வீடு இருந்தது என்று கூறியிருக்கிறார்.

நடிகருடன் எக்கச்சக்க முத்தக்காட்சி!! முகம் சுளிக்க வைக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரனின் டிரைலர் வீடியோ..
சாலி கிராமம் வீட்டில் இருந்து நுங்கம்பாக்கம் சென்றோம். நிக்கி அப்பார்ட்மெண்ட் எங்களுக்கு சரியாக இருந்ததால் அங்கு சென்றோம். தினமும் நான் வருவதை திறந்து நிக்கி கதவை திறந்தே வைத்திருப்பார் என்று ஆதி காமெடியாக கூறியிருக்கிறார்.
இதனைதொடர்ந்து, நாங்கள் திருமணம் செய்வதற்கு முன் 7, 8 ஆண்டுகளாக ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் யாகாவாராயினும் நாகாக்க பின் நண்பர்களாக ஆரம்பித்து காதலாக மாறியது. எங்கள் காதலை முதலில் கண்டிப்பிடித்தது யாரும் இல்லை, மறைமுகமாக நலம் விசாரிப்பார்கள் என்று ஆதியும் நிக்கி கல்ராணியும் தெரிவித்துள்ளனர்.