விவாகரத்தாகாமல் ஆணோடு ஒரே கலர் டிரஸ் அணிந்து சென்றால் எப்படி!! விளாசிய ஆர்த்தி..
ஒரே கலரின் டிரஸ்
நடிகர் ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தியை கடந்த ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இதற்கு ஆர்த்தி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ரவி மோகன் தன்னுடைய தோழி கெனிஷாவுடன் ஒரே நிறத்தில் ஆடையணிந்து பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதிர்ச்சி கொடுத்தார்.

இதனையடுத்து சமீபத்தில் விஜய் - திரிஷா இருவரும் ஒரே கலரில் ஆடையணிந்து ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்னோடி ரவி மோகன் தான் என்று பலரும் விமர்சித்தனர்.
இந்த விவகாரம் குறித்து ரவி மோகன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து, அதிகமாக பாதிக்கப்படுவது ஆண்கள் தான் ஒரு நாள் உங்களுக்கு என்னை புரியும், தயவு செய்து என்னை வாழ விடுங்கள் என்று கூறியிருந்தார். இதனையடுத்து ஆர்த்தி ரவி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

ஆர்த்தி ரவி
அதில் நேர்மைக்காக குரல் கொடுப்பவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார். மேலும், விவாகரத்து உறுதியாவதற்கு முன் ஆர்த்தி ஒரு ஆணுடன் ஒரே கலரில் ஆடையணிந்து வெளியே சென்றால் உலகம் அமைதியாக இருக்குமா?
அதை எல்லாம் செய்தப்பின் பெண்கள் தான் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொன்னால் ஏற்க முடியுமா? அப்படி செய்துவிட்டு பாதிக்கப்பட்டவன் என்று சொல்லும் ஆண்களை நாங்களும் கைக்காட்டுவோம், இது கொடூரமான செய்கை என்று குறிப்பிட்ட பதிவினை பகிர்ந்துள்ளார் ஆர்த்தி ரவி. இதற்கு பலரும் ஆர்த்திக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.