திருமணமான நடிகருடன் கோவை சரளாவுக்கு இருந்த உறவு!! ஆசைக்காட்டி மோசம் செய்த வைகைப்புயல்..

Kovai Sarala Vadivelu Gossip Today
By Edward Apr 17, 2024 03:36 AM GMT
Edward

Edward

Report

கவுண்டமணி, செந்தில், வடிவேலு இருந்த காலக்கட்டத்தில் பெண் காமெடி நடிகையாக திகழ்ந்தவர் மனோரம்மா. அவருக்கு அடுத்த அந்த இடத்தினை பிடித்தவர் தான் நடிகை கோவை சரளா. சிறு காமெடி ரோலில் வடிவேலுவுடன் நடித்து வந்த கோவை சரளா, பாலு மகேந்திரா இயக்கத்தில் சதிலீலாவதி படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். கமல் ஹாசனுக்கே டஃப் கொடுக்கும் வண்ணம் அவர் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

திருமணமான நடிகருடன் கோவை சரளாவுக்கு இருந்த உறவு!! ஆசைக்காட்டி மோசம் செய்த வைகைப்புயல்.. | Actor Betrayed Kovai Sarala Serious Relationship

இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த கோவை சரளா, தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார். இதுவரை கோவை சரளா திருமணம் செய்யாமல் இருப்பது குறித்து அவரிடன் பணிபுரிந்த இயக்குனர் வி சேகர், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சில விசயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, வரவு எட்டணா செலவு பத்தணா, விரலுக்கேத்த வீக்கம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி வெற்றியை கொடுத்தவர் வி சேகர்.

அப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமே வடிவேலு மற்றும் கோவை சரளா தான். இருவரின் கெமிஸ்ட்ரி அந்த காலக்கட்டத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் சில காரணங்களால் இருவரும் சேர்ந்து நடிக்கவே இல்லை. அதற்கு காரணம் இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கசப்பு தான் காரணம்.

திருமணமான நடிகருடன் கோவை சரளாவுக்கு இருந்த உறவு!! ஆசைக்காட்டி மோசம் செய்த வைகைப்புயல்.. | Actor Betrayed Kovai Sarala Serious Relationship

ஆரம்பத்தில் வடிவேலுவுடன் நடிக்க சம்மதிக்காமல் இருந்திருக்கிறார் கோவை சரளா. பின், சம்மதம் தெரிவித்தாலும் கட்டிப்பிடிக்கூடாது, தொடக்கூடாது சில வசனங்கள் பேசக்கூடாது என்று கண்டீசன் போட்டிருக்கிறார் கோவை சரளா. ஆனால் காலம் போக இருவருக்கும் இடையே புரிதல் ஏற்பட்டு இந்த நட்பு காதலாக மாறி இருக்கிறது.

இருவரும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்ததாக இயக்குனர் வி சேகர் தெரிவித்திருக்கிறார். ஆனால் சில காரணங்களால் அது நடக்காமலே போய்விட்டதால் கோவை சரளா இதனால் இருவரும் இணைந்து நடிப்பதையும் நிறுத்திவிட்டார்கள். அதன்பின் திருமணமே வேண்டாம் என்று கோவை சரளா அதை ஒதுக்கிவிட்டார் என்று கூறியிருக்கிறார் வி சேகர்.