நான் செத்தா ’அந்த’ பேரோடு போகணும் அதான் என் ஆசை.. நடிகர் நெப்போலியன் உருக்கம்..
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்து வரும் நடிகர் நெப்போலியன் தன்னுடைய மூத்த மகன் தனுஷுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தத்தை முடிந்திருந்தார்.
விரைவில் ஜப்பானில் திருமணம் நடக்கவுள்ள நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சில உருக்கமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். 16 வயதில் அரசியலில் நுழைந்துவிட்டேன். என் மாமா கே என் நேரு அமைச்சராக இருந்தபோது அவருக்கு பி.ஏவாக இருந்தேன்.
நெப்போலியன் உருக்கம்
நடித்துக்கொண்டிருக்கும் போதே அரசியலைவிட்டு விலகாமல் இருந்து எம் எல் ஏ-வாகி மினிஸ்டராகினேன். என் குடும்பத்திற்காக இப்போது நான் அரசியல், சினிமாவில் இருந்து விலகி அமெரிக்காவில் குடியேறிவிட்டேன். என் அம்மா, அப்பாவிற்காக மணிமண்டபத்தையும் கட்டி இருக்கிறேன்.
என்னுடன் பிறந்தவர்களையும் நான் நன்றாக பார்த்துக் கொள்கிறேன். என்னோடு இருப்பவர்களையும் நன்றாக பார்த்து கொண்டு வருகிறேன்.
"நான் செத்தால்கூட இப்படியொரு மனுஷன் நம்மோடு வாழ்ந்துட்டு போயிருக்காரு என்று நம்மோடு இருப்பவர்கள் நம்மை பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
ஒரு மனிதன் தனக்குள் இருக்கும் கேரக்டரிகளில் சரியாக இருந்தால்தான் அவன் மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று அர்த்தம்" என்று உருக்கமாக நெப்போலியன் பேசியிருக்கிறார்.