விஜய் அண்ணான்னு கத்தி கூப்பிட்ட ரசிகை!! கண்டுக்கொள்ளாமல் ஏமாற்றி சென்ற தளபதி..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் திகழ்ந்து வரும் நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் வேலைகளில் கவனம் செலுத்தியும் வருகிறார்.
இப்படத்தினை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ள விஜய், அதன்பின் சினிமாவில் இருந்து விலகவுள்ளார் என்றும் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய், இன்று காலை ரஷ்ய நாட்டிற்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார்.
அங்கு விஜய்யின் தீவிர ரசிகை ஒருவர், விஜய் சார், விஜய் அண்ணா என்று கத்தி கூப்பிட்டிருக்கிறார். ஆனால் விஜய் சற்றும் காதில் வாங்காதது போல் அங்கிருந்து கண்டுக்கொள்ளாமல் சென்றிருக்கிறார்.
இதனால் அந்த ரசிகை மிகவும் வருத்தப்பட்டு, பார்த்துவிட்டாவது போயிருக்கலாம் இருந்தாலும் பரவாயில்லை, அவர் தேர்தலில் ஜெயிக்கனும் முதலமைச்சராகவும், எங்கள் ஓட்டு அவருக்கு தான் என்று ஏக்கத்துடன் பேசியிருக்கிறார்.
Thalapathy Vijay latest from Airport❤️#ThalapathyVijay #Vijay #GOAT #TheGreatestOfAllTime #Ghilli #Cineulagam pic.twitter.com/GoyL1tmlmF
— Cineulagam (@cineulagam) May 11, 2024