திரிஷா - விஜய் விவகாரம்..ராதிகா சொன்னதை கவனித்தார்கள்...
திரிஷா - விஜய்
மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற அடுத்த சில நாட்களில் விஜய் - திரிஷா திருமண நிகழ்ச்சிக்கு ஒன்றாக சென்றது முதல் தற்போது வரை பலரும் விமர்சித்து வருகிறார்கள். சமீபத்தில் கூட முதலமைச்சர் விஜய் பிறந்தநாளுக்கு அவருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார் திரிஷா.

இந்நிலையில் சீனியர் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ராதிகாவிடம் தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்று பேட்டி எடுத்தபோது, விஜய் - திரிஷா குறித்த கேள்வி கேட்கப்பட்டது.
ராதிகா
அதற்கு அவர், அரசியல் செய்ய வந்துவிட்டால் நீங்கள் மக்களுக்கான மனிதராக இருக்க வேண்டும். எம்ஜிஆர், என்டிஆர், ஜெயலலிதா ஆகியோர் எல்லாம் சினிமாவிலிருந்து வந்தவர்கள்.
அவர்கள் வந்த காலக்கட்டம் வேறு, அவர்கள் வந்தபோது மக்களின் சிந்தனையே வேறாக இருந்தது, சமூக அக்கறை வேறாக இருந்தது. இப்போது 2026ல் சோசியல் மீடியா வளர்ந்துவிட்டது, பெரிய வாய்ஸ் கொடுக்கிறார்கள். அதில் எது உண்மை, பொய் என்று தெரிந்துகொள்வதே பெரிய வேலையாக இருக்கிறது.

இப்போது அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு பெரிய சவால் இருக்கிறது, ஆனால் அவர்கள் மக்களுக்கான மனிதராக இருக்க வேண்டும், மற்றபடி யாருடைய பெர்சானல் வாழ்க்கையிலும் நான் செல்லவில்லை என்றார் ராதிகா.