அந்த மாதிரி படத்தை பார்க்க பிடிக்காது, ஆனால்!! உண்மையை கூறிய நடிகை ஆண்ட்ரியா..
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற அந்நியன் படத்தின் பாடலை பாடி, பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். அதன்பின் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தும் பாடல்களை பாடியும் பிரபலமானார்.
ஆரம்பத்தில் இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்து பின் லீக் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பின் அவரை விட்டு பிரிந்த ஆண்ட்ரியா, படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பிசாசு 2, நோ எண்ட்ரி, ’கா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து முடித்தும் சில படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். சமீபத்தில் அவர் நடித்துள்ள கா படத்தின் ஆடியோ லான்ச் நடந்துள்ளது.
படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் பிரமோஷனுக்காக நடிகை ஆண்ட்ரியா பேட்டியில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், கா படத்தில் முழுக்க முழுக்க ரத்தத்தில் குளித்தது போல் இருக்கவில்லையா உங்களுக்கு என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஆண்ட்ரியா, அந்த மாதிரியான படத்தை பார்க்க பிடிக்காது என்றும் ஹர்ரர்ஸ், வயோலன்ஸ் படங்களை பார்க்க பிடிக்காது என்றும் கூறியிருக்கிறார்.
ஆனால், அதுபோல் படம் எனக்கு வரும் போது நடிப்பேன். பார்க்கும் போது வேற, நடிக்கும் போது வேற என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். போதும்பா இந்த பார்ட் 2 அப்டேட்ஸ். அதுபற்றி இயக்குனர்களிடம் அப்டேட்ஸ் கேட்டு இருக்கிறேன் என்று ஆண்ட்ரியா கூறியிருக்கிறார்.