திருமணத்திற்கு முன்பே உறவு தப்பில்லை.. பிரபல நடிகை தியா மிர்சா பகீர்..
தியா மிர்சா
1999ல் அரவிந்த் சுவாமி நடித்த என் சுவாச காற்றே படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் நடிகை தியா மிர்ஸா. இதன தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து பிஸியான நடிகை தியா தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
சாஹில் என்பவரை கடந்த 2014ல் திருமணம் செய்து கடந்த 2019ல் விவாகரத்து செய்தார். அதன்பின் அடுத்த 2 ஆண்டுகள் கழித்து 2021ல் வைபவ் ரக்ஷி என்பவரை திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு முன்பே உறவு
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், திருமணத்திற்கு முன் பெண்கள் கர்ப்பம் ஆவது குறித்து பகிர்ந்துள்ளார். அதில், திருமணத்திற்கு முன் உறவு வைத்துக்கொள்வது இங்கு தவறாக பார்க்கப்படுகிறது.
ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்தால் அவர்கள் விருப்பம், இதைப்பற்றி முடிவு எடுக்க அவர்களுக்கு முழு உரிமையுள்ளது.
அதே சமயம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகருத்து வரும் இந்த காலக்கட்டத்தில் பெண்கள் கருக்கலைப்பு கூட செய்ய முடியாத நிலை அமெரிக்காவில் தற்போதைய நடைமுறைக்கு வந்துள்ள கருக்கலைப்பு சட்டத்தினால் வந்திருக்கிறது என்று நடிகை தியா மிர்சா கூறியிருக்கிறார்.