பல ஆண்கள் என்னை காதலிப்பதாக கூறி அந்த மாதிரி நடந்து கொண்டனர்.. பிரபல நடிகை பேட்டி
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் ஷர்மிளா.
பல படங்களில் நடித்து வந்தவர் இவர், தற்போது சினிமா வாய்ப்பு இல்லாததால் கிடைக்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அட்ஜஸ்ட்மென்ட்
இந்நிலையில் ஷர்மிளா, பேட்டி ஒன்றில் பல விஷயங்களைக் கூறியுள்ளார். அதில், " நான் சினிமாவில் வந்த போது கிளாமர் ரோல்களில் நடித்தால் பாப்புலர் ஆகிவிடலாம் என்று பலரும் கூறினார்கள். ஆனால் எனக்கு அந்த மாதிரி நடிக்க விருப்பம் இல்லை".
"என்னுடைய அப்பா மறைந்த பிறகு தான் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி தெரியவந்தது. என்னுடைய அப்பா என்னை சரியாக வளர்க்கவில்லை".
"நான் சம்பாரிக்கும் பணத்தை என்னிடமே வைத்துக்கொள்ள சொல்லிவிடுவார். அதனால் பணத்திற்காக பல ஆண்கள் காதலிப்பதாகக் கூறி எண்ணிடம் மோசமாக நடந்து கொண்டு பணத்தை பறித்துவிட்டனர்" என்று கூறியுள்ளார்.