பில்லி சூனியம் வைத்த பெண்..100 தூக்க மாத்திரை சாப்பிட்ட நடிகையின் தற்போதைய நிலை..
மோகினி
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக 90ஸ்-களில் வலம் வந்தவர் மோகினி. இவர் ஈரமான ரோஜாவே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். திரையுலகில் பிசியாக நடித்து வந்த இவர் தன்னுடைய 21 வயதில், கடந்த 1999ம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்டு, அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திருமணத்திற்கு பின் மோகினியின் வாழ்க்கையை ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகவே கடந்துள்ளது. நாட்கள் செல்லசெல்ல இரவில் தூக்கத்தில் அமானுஷ்யமான கனவுகள் அவரை தொந்தரவு செய்ய ஆரம்பித்திருக்கிறது.
தூக்கத்தில் யாரோ கழுத்தை நெரிப்பது போலவும், கைகளை பிராண்டுவது போலவும் இருக்கும் என்றும் கண் விழித்து பார்த்தால் அதன் தடயம் தெரியும் என்றும் மோகினி ஒரு பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார்.
பில்லி சூனியம்
அதற்கு காரணம், தன்னுடைய கணவரின் உறவுக்கார பெண் ஒருவர் பில்லி சூனியம் வைத்ததாக ஜோசியர் ஒருவர் கூறியதாக அப்பேட்டியில் தெரிவித்துள்ளார் மோகினி.
மேலும் அந்த அமானுஷ்யத்துல் இருந்து விடுபட பல்வேறு கட்டங்களில் அதிகளவு தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாகவும், அதன் எண்ணிக்கை 100 தாண்டும் .
பலமுறை தற்கொலைக்கு முயற்சித்தாகவும் தன் குடும்ப வாழ்க்கையிலும் விவாகரத்து வரை சென்று திரும்பி, பிரச்சனைகளில் இருந்து தன்னை மீட்டது யேசு தான் என்று 2006ல் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதாகவும் நடிகை மோகினி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.