நெருக்கமான காட்சியில் அந்த இடங்களை தொடும் போது இப்படித்தான் இருக்கும்!! நடிகை கஜோல் ஓப்பன் டாக்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை கஜோல் பிரபுதேவா நடிப்பில் 1997ல் வெளியான மின்சார கனவு படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகினார். அதனை தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானார்.
பல ஆண்டுகளாக தமிழ் பக்கமே தலைக்காட்டாத கஜோல் தனுஷ் நடிப்பில் 2017ல் வெளியான விஐபி 2 படத்தில் வில்லி ரோலில் நடித்திருந்தார். திருமணத்திற்கு பின் கவர்ச்சியில் நடிக்காமல் இருந்த கஜோல் சமீபத்தில் ஒரு வெப் தொடரில் படுக்கைகாட்சிகளிலும் நடித்து ஷாக் கொடுத்தார்.
தற்போது 49 வயதாகும் கஜோல் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது எப்படி இருக்கும் என்று பகிர்ந்திருக்கிறார். படங்களில் உடல் ரீதியாக மானபங்கம் (molesting) செய்யப்படும் காட்சிகலில் நடிக்கவே மாட்டேன்.
நம்மை ஒருவர் தொடும் போது நாம் நடிகை என்ற மனநிலை ஒரு அளவிற்கு தான் இருக்கும் என்றும் எனக்கு மிகவும் அசௌகரியமாக (uncomfortable) இருக்கும். உடல் அளவில் துன்புறுத்தல் அல்லது மானமங்கம் போன்ற காட்சிகளில் நடிப்பது மிகவும் மோசமாக அருவருப்பாக எனக்கு தோன்றும் என்றும் கூறியிருக்கிறார்.
அப்படியான காட்சிகளில் நான் நடித்து இருக்கிறேன். ஆனால் எனக்கு அது ரொம்ப மோசமான அனுபவத்தை மட்டுமே கொடுத்தது. ஒரு நல்ல நடிகை என்று இந்தமாதிரி காட்சிகளில் நடித்து தான் காட்ட வேண்டிய அவசியம் இல்லை, அதை நிரூபிக்க வேறு 100 வழிகள் இருக்கிறது. அந்த அனுபவம் எனக்கு மீண்டும் தேவையில்லை என்றும் நடிகை கஜோல் தெரிவித்திருக்கிறார்.