நடிகை ஆகவில்லையென்றால் அதை தான் செய்திருப்பேன்.. அஜித்தை பாலோ செய்யும் கீர்த்தி பாண்டியன்
கீர்த்தி பாண்டியன்
சினிமாவில் கதாநாயகியாக தும்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானாவர் நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன்.
பிறகு கண்ணகி மற்றும் ப்ளூ ஸ்டார் படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் பிரபலமானார். ப்ளூ ஸ்டார் படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இப்போது அஃகேனம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் விழாவில் கீர்த்தி பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஓபன் டாக்
அதில், " இந்தப் படத்தில் இந்திரா என்னும் கதாபாத்திரத்தில் கேப் ஓட்டுநராக நடித்திருக்கிறேன். எனக்கு ட்ரைவிங் என்றால் மிகவும் பிடிக்கும்.
நான் நடிக்க வந்திருக்காவிட்டால் கண்டிப்பாக கார் ரேஸ் வீராங்கனையாக ஆகியிருப்பேன். எனக்கு எப்போதுமே ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கும் என் அப்பா தான் எனக்கு ஹீரோ" என்று தெரிவித்துள்ளார்.