அம்மா ரோலுக்கு கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க!! துணை நடிகை ஓப்பன் டாக்..
கன்னட படங்களில் நடித்து தமிழில் ஒருசில படங்களில் துணை நடிகையாகவும் சீரியல்களிலும் நடித்து வருபவர் நடிகை மாலதி PS. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சினிமாவை விட்டு விலக நினைத்த காரணம் என்ன என்று பகிர்ந்துள்ளார். ஆரம்பத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்றால் இப்படிதான் இருக்கும் என்று ஒரு மனநிலையில் இருந்தேன். ஆனால் இப்படியெல்லாம் இருக்குமா என்று அதிர்ந்து போனேன்.
15 வருஷமாக கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்தபின் தான் சினிமாத்துறைக்கு வந்தேன். காசுப்பணத்திற்காக நாம் சினிமாவுக்கு போனால் இந்த அட்ஜெஸ்ட்மெண்ட், காம்பர்மைஸ் என்று பார்க்கணும். நடிக்க வேண்டும் என்று முடிவில் நான் சென்றேன். ஒரு போனில் என்னிடம் கூச்சமில்லாமல் கேட்டார்கள். ஆரம்பத்தில் இருந்தே, அதுவும் முதல் நாளிலேயே ஆசைக்காட்டி அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டார்கள்.
துவக்கத்தில் நல்லா பேசிட்டு கடைசியா அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கு என்று கூறியதும் அங்கிருந்து கிளம்பிவிடுவேன். சில பெண்கள் அதற்காக போகிறார்கள், சிலரிம் கட்டாயப்படுத்தியும் போகாதவர்களும் இல்லை. 45 வயதான போது எனக்கு இந்த மாதிரி டார்ச்சர் இருக்காது, என்று நினைத்தேன். ஆனால், என் மகளைவிட எனக்கு தான் எளிதில் அதை கேட்கிறார்கள்.
நீங்கள் பார்க்காததா? தெரியாதா? என்று டார்ச்சர் செய்கிறார்கள். வயதானவர்களிடம் ஈஸியாக கேட்கிறார்கள். இந்தமாதிரி வாய்ப்புக்கு, அம்மா கேரக்டருக்கு நான் அட்ஜெஸ்ட் பண்ணி தான் வாய்ப்பு கிடைக்கணும் என்றால் வேண்டாம். நான் அப்படியான வேலையை நான் செய்யவில்லை என்று நடிகை மாலதி கூறியிருக்கிறார்.
அப்படி அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஒத்துக்கொண்டால் பல காசு கிடைக்கும், பிக்கப், டிராப், கேரவன், காஸ்டிங் - ஆடிஷன் எல்லாம் இருக்காது. அம்மா கேரக்டருக்கு கூட கிடைக்கும் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார் நடிகை மாலதி. இதெல்லாம் கன்னட சினிமாவில் பார்த்திருக்கிறேன், தமிழில் பார்த்ததில்லை என்றும் கூறியிருக்கிறார்.