உடல் தேகம் கூடியதால் வாய்ப்பை இழந்தாரா? பிரபல நடிகைக்கு ஏற்பட்ட நிலை..

tamilactress mandra
By Edward Jul 13, 2021 03:16 PM GMT
Edward

Edward

Report

90களில் நடித்த நடிகைகள் பலர் தற்போது காணாமல் போய்விடுகிறார்கள். அதில் ஒருசிலர் மட்டும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். அந்தவகையில் 90களில் தன் கவர்ச்சியான நடிப்பால் கொடிகட்டி பறந்த நடிகை ராசி மந்த்ரா. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியளில் நடித்து பிரபலமானார்.

தமிழில் விஜய் அஜித் படங்களான லவ் டுடே, ராஜா, பிரியம், கல்யாண கலாட்டா, சிம்மாசனம் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். தமிழைவிட தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து பிஸியானார். படங்களில் நடித்தும் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியும் வந்தார் மந்த்ரா. கடைசியாக வாலு படத்தில் தமிழில் நடித்துள்ளார்.

இதையடுத்து ஸ்ரீ முனி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இதையடுத்து சமீபத்தில் தனியார் இணையதளத்திற்கு பேட்டி கொடுத்து சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில், `சில ஆண்டுகளுக்கு முன் படவாய்பில்லாமல் தவித்து வந்தேன். அப்போது இயக்குநர் தேஜா நடிகர் மகேஷ் பாபு படத்தில் நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று கதையை கூறினார்.

படப்பிடிப்பில் நடிக்க ஆரம்பித்தேன் ஆனால் கதை கூறிய விதத்தைவிட படகாட்சிகள் வேறுமாதிரியாக இருந்தது. படத்தில் வில்லனுடன் படுகவர்ச்சி காட்சிகளில் நடிக்க நேர்ந்தது. அதை பொருட்படுத்தாமல் சினிமாவில் கெட்ட பெயர் வாங்காமல் இருக்க முழு படத்தினையும் நடித்து கொடுத்தேன். இப்படியான இயக்குநர் தேஜா என்னை ஏமாற்றி மோசமான காட்சிகளில் நடிக்கவைத்தார் என்று ஷாக்கொடுத்துள்ளார். தற்போது தன் பெண் குழந்தையுடன் கணவரோடு வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், மந்தராவின் வாழ்க்கையில் எதனால் சினிமா வாழ்க்கையை பரிகொடுத்தார் என்ற உண்மையை நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். நடிகை மந்த்ராவின் முன்னழகு அதிகளவில் இருப்பதாலும் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கமிட் செய்ய தயங்கியதாக கூறியுள்ளார்.