நயன்தாரா தான் அந்த வியாதியை பரப்பினார்.. பிரபலம் கூறிய அதிர்ச்சி விஷயம்
நயன்தாரா
தனுஷ் பற்றி நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்ட பிறகு ஏற்பட்ட சர்ச்சை பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வந்தது.
விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் பட ஷூட்டிங்கில் தான் நயன்தாரா உடன் விக்னேஷ் சிவனுக்கு காதல் மலர்ந்தது.
திருமண ஆவணபடத்தில் நானும் ரௌடி தான் பட காட்சிகளை பயன்படுத்த தயாரிப்பாளர் தனுஷிடம் அனுமதி கேட்டு விக்கி மற்றும் நயன் இருவரும் இரண்டு வருடமாக கோரிக்கை வைத்தார்களாம்.

ஆனால் அதற்கான அனுமதி தனுஷ் தரவே இல்லை என்ற நிலையில், NOC இல்லாமலேயே அதை வீடியோவில் பயன்படுத்தினார்கள். அதற்கு நஷ்டஈடு கேட்டு தனுஷ் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
அதிர்ச்சி விஷயம்
இப்படி இரு தரப்பினரும் சண்டை போட்டு கொள்ளும் நிலையில், இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் சேகுவேரா தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில், "முதலில் தனிப்பட்ட இருவரின் திருமணம் வியாபாரமானது நயன்தாராவால் தான். இது போன்ற ஒரு வியாபார வியாதியை நயன்தாரா தான் பரப்பினார்.
நெட்ஃப்ளிக்ஸ் போன்ற பெரிய கார்ப்பரேட் கம்பெனியை திருமண வீடியோக்களை வாங்க வைத்ததும் நயன்தாரா தான்" என்று கூறியுள்ளார்.