நடிகர் மோகன்லாலால் நயன்தாரா ஏமாற்றப்பட்டாரா.. அதிர்ச்சியளிக்கும் பல ரகசியத்தை போட்டுடைத்த பிரபலம்
நயன்தாரா
சினிமாவில் நுழைந்த காலக்கட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து அதை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் கடின உழைப்பாலும், சினிமா மேல் உள்ள ஆசையாலும் இன்று லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.
இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளத்தை தாண்டி அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அந்த படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பால் பாலிவுட் பக்கம் சென்று படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை நயன்தாரா, சினிமா பயணமோ சொந்த வாழ்க்கையோ இரண்டையும் வெற்றிகரமாக பார்த்து வருகிறார்.
அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் மூலம் பல சர்ச்சைகளை சந்தித்த இவர் நானும் ரௌடிதான் படத்தில் நடித்து கொண்டு இருந்தபோது அந்த படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ரகசியம்
பின் வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களை பெற்றுக்கொண்டார். இந்நிலையில், நடிகை நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.
அதில், "பிரபுதேவா ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த உறவில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். பின் நயன்தாராவை காதலித்தார், நயன் பிரபுதேவாவின் பெயரை பச்சையெல்லாம் குத்திக்கொண்டார்.
ஆனால், அந்த உறவும் நிலைக்கவில்லை. மோகன்லாலால் ஏமாற்றப்பட்டு, சிம்புவால் ஏமாற்றப்பட்டு கடைசியாக பிரபுதேவாவிடமும் ஏமாற்றப்பட்டார் நயன்தாரா.
அவரை இந்த ஆணாதிக்க சமுதாயம் குத்தி கிழித்தது. ஆனால், அவை அனைத்தையும் தாண்டி தற்போது தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்" என்று கூறியுள்ளார்.