நடிகை ஷோபாவின் மரணம்..பொணத்தை கூட பார்க்கமுடியல.. நொந்து போய் கண்கலங்கிய நடிகை பார்வதி
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை பார்வதி. இவர் திரைப்படங்களை தாண்டி சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாரவ்தி சோபா குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், நடிகை ஷோபா எனக்கு மகள் போன்றவள். எங்களுக்குள் நல்ல உறவு இருந்தது.
ஒரு நாள் படத்திற்காக ஷூட்டிங் சென்று இருந்தேன். அப்போது ஷோபா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வெளியானது.
இதை கேட்டவுடன் அதிர்ச்சியில் மூழ்கினேன். அந்த சமயத்தில் ஷூட்டிங்கில் இருந்ததால் இறப்பிற்கு கூட செல்ல முடியவில்லை. கடைசி வரை ஷோபாவின் முகத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.