நானும் பிக் பாஸ் ரஞ்சித்தும் பிரிந்து விட்டோமா?.. போட்டுடைத்த நடிகை பிரியா ராமன்
பிக் பாஸ் ரஞ்சித்
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 90 - ஸ் காலகட்டத்தில் பிரபலமான ரஞ்சித்தும் போட்டியாளராக விளையாடி வருகிறார்.
வில்லன் கதாபாத்திரம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பின் நடிகர், இயக்குனர் என பல அவதாரம் எடுத்து வலம் வந்தவர் ரஞ்சித். இவர் ‘‘நேசம் புதுசு’’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை பிரியா ராமன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த ஜோடிக்கு ஆதித்யா, ஆகாஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த இந்த ஜோடி சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.
ஆனால், அதில் ஒரு திடீர் ட்விஸ்ட்டாக ஏழு ஆண்டுகளுக்கு பின் இந்த ஜோடி மீண்டும் இணைந்து விட்டதாக கூறி திருமண நாள் அன்று அறிவித்தனர்.
இந்நிலையில், நடிகை பிரியா ராமன் பிக் பாஸ் தொடக்க விழாவில் கலந்து கொள்ளவில்லை.
போட்டுடைத்த பிரியா ராமன்
இதனால் அவர்கள் மீண்டும் பிரிந்து விட்டார்களா என்று கேள்வி எழுந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது, பிரியா ராமன் கணவர் ரஞ்சித் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதில், " ரஞ்சித் பிக்பாஸில் கலந்துகொள்ள இருந்த நேரத்தில், எங்களுக்கு தெரிந்த ஒரு இளம் ஜோடிகளுக்கு எங்கள் உதவி தேவைப்பட்டது அன்று எங்கள் இருவரில் யாரேனும் ஒருவர் பங்கேற்க வேண்டிய சூழல் இருந்ததால், நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
ரஞ்சித் மிகவும் நற்குணம் கொண்டவர் அதனால் கண்டிப்பாக அவர் நன்றாக விளையாடுவர் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.