நான் சாகும் நேரம் வந்துவிட்டது!! பரபரப்பை கிளப்பிய பிக்பாஸ் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..
கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டு கன்னட சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. தமிழில் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் அறிமுகமாகி, அதன்பின் சரவணன் மீனாட்சி 2 சீரியலில் மீனாட்சியாக நடித்து அனைவரையும் ஈர்த்து வந்தார். அந்த சீரியல் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பையடுத்து, அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து பிரபலமானார்.
பின் தன்னுடன் நடித்த சக நடிகரான தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். கடந்த ஆண்டு ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
சமீபத்தில் அவரது தந்தை பெங்களூருவில் மரணமடைந்தது அவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதிலிருந்து மீண்டு வந்த ரச்சிதா, அம்மாவுடன் அவுட்டிங், ஆன்மீகம் என்று சென்று வருகிறார்.
இந்நிலையில், Fire என்ற படத்தில் நடித்து வரும் ரச்சிதா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். கடற்கரையில் நின்று கொண்டிருக்கும் அந்த வீடியோ பதிவில், நான் இறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதனால் என் வாழ்கையை நான் விரும்பும் படியாக வாழவிடுங்கள் என்று சோகத்துடன் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், அப்படி என்ன சோகம் நடந்துவிட்டது என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள். பல இனிமேல் தினேஷுடன் வாழப்போவதில்லை என்று மறைமுகமாக பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
