என்னை கண்டபடி திட்டினார் நடிகை ராதிகா? அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர்
தமிழ் சினிமாவில் நடக்கும் பல ரகசியத்தையும் பிரபலங்களின் நடத்தை பற்றியும் பேட்டிகளில் கூறி அம்பலப்படுத்தி வருபவர் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன்.
சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலில் பேசிய அவர், நான் சில தினங்களுக்கு முன் சென்னை திருவான்மியூர் கடற்கரை பகுதிக்கு சென்றிருந்தேன். அங்கு மாஸ்க் போட்டு என்னை பார்த்து பேசினார் நடிகை ராதிகா சரத்குமார்.
ஏன் என்னுடைய அம்மாவை (நடிகை கீதா ராதா) அந்த வார்த்தை கூறி பேசினீர்கள் என்று கேட்டார். தவறான வார்த்தைகளை கூறி என்னை திட்டினார். இதற்கு நான் வழக்கு எதுவாக இருந்தாலும் போடுங்கள்.
நான் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினேன். நான் ராதிகாவை பற்றி உயர்வாகத்தான் பேசியிருப்பேன். தவறாகவோ இழிவாகவோ பேசியது கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
இதுபோல் சினிமாக்காரர்களை பாராட்டும் போது நன்றி தெரிவிக்க வராமல், புகாரளிக்கும் போது ஏன் சண்டைப்போடுகிறீர்கள் என்றும் கூறியுள்ளார்.