ஷூட்டிங்கில் அசிங்கமாக பேசிய இயக்குநர் பாலா!! சாபம் விட்டு போன நடிகை சஹானா..
நடிகை சஹானா
சின்னத்திரை சீரியல் நடிகையாக நடித்து பின் வெள்ளித்திரையில் ஒருசில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சஹானா. அழகு, அரூபம், சுந்தரி நீயும் சுந்தரன் நானும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார் சஹானா.
தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சிந்து பைரவி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் இயக்குநர் பாலா படத்தில் நடித்த மோசமான சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.
இயக்குநர் பாலா
அதில், பாலா சார் படத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். நிறைய ரியாக்ஷன் எல்லாம் கத்துக்கிட்டேன். கடைசி நேர ஷூட் நேரத்தில் பாலா சாரை பார்க்கும் போது ஒருமாதிரி மனசுக்கு பிடிக்காத மாதிரி ஆக்விட்டது. அந்தளவிற்கு என்னை அவர் காயப்படுத்திவிட்டார்.
எல்லார் முன்பும் தப்பா பேசிட்டாரு, ஒரு பொண்ணுன்னு பார்க்காமல் மத்தவர்மேல் இருந்த தப்பை என் மீது காட்டிவிட்டார். எல்லார் முன்பும் என்னை அசிங்கமாக பேசியதால், உடனே அதற்கு நான் ரியாக்ட் செய்துட்டேன்.
அவரிடம் அதை அப்போது பேசாமல் பின், அவரிடம் சென்று, இதனால் எனக்கு வேறு வாய்ப்பு வரவில்லை என்றாலும் பரவாயில்லை, இந்த படம் ஓடாதுன்னு சாபம் விட்டு வந்துவிட்டேன்.
அந்த படம் பெருசா போகவில்லை, நான் சொன்னதால் ஓடவில்லை என்ற வருத்தம் இருக்கு, ஆனால், அந்த சமயத்தில் நான் சொன்னது சரிதான் என்று நினைத்தேன், அந்தளவிற்கு அவர் கஷ்டப்படுத்தினார். அதற்கான சம்பளமும் அவர்கள் தரவில்லை, அவர்கள் யாரும் அதன்பின் என்னிடம் பேசவில்லை என்று சஹானா தெரிவித்துள்ளார்.