14 ஆண்டு சினிமா வாழ்க்கையில் ஏமாற்றம்.. வியாதி.. விரக்தி!! 37 வயதை கடந்த நடிகை சமந்தா..
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு ரோலில் நடித்து நடிகையான நடிகை சமந்தா, தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்தார். அதன்பின் தமிழில் பாணாகாத்தாடி படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இதனை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.
நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 4 ஆண்டுகள் கழித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
இதன்பின் படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வந்தார். ஏமாற்றம், வியாதி, விரக்தி போன்றவற்றில் இருந்து மீண்டு வரும் சமந்தா, சமீபகாலமாக உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷூட்டினை நடத்தி வருகிறார்.
தற்போது 14 ஆண்டு சினிமா வாழ்க்கையில் இருந்து வரும் சமந்தா தன்னுடைய 37வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். பிரபலங்கள் அவர் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வரும் நிலையில், தெலுங்கு சினிமாவில் பங்காரம் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறி போஸ்டரை வெளியிட்டுள்ளார். கையில் துப்பாக்கியுடன் கோபத்தில் பார்க்கும் படியான அந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.