கமலுடன் நெருக்கமாக இருக்கிறார்-ன்னு!! நடிகை சிம்ரன் காதலை பற்றிய கூறிய நடிகர்..
தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி மறந்த நடிகைகளில் ஒருவர் சிம்ரன். இவர் 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். திருமணத்திற்கு முன் நடிகை சிம்ரன் இரண்டு நடிகர்களுடன் காதல் உறவில் இருந்துள்ளார் என கிசுகிசுக்கப்படுகிறது. முதலில் பிரபு தேவாவின் அண்ணன் நடன இயக்குனர் ராஜு சுந்தரம் என்பவருடன் காதல் உறவில் நெருக்கமாக பழகி வந்துள்ளார் சிம்ரன்.
ஆனால், இவர்களுடைய காதல் கரைசேரவில்லை. பின் உலக நாயகன் கமல் ஹாசனுடன் கிசுகிசுக்கப்பட்டார் சிம்ரன். இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாக திரை வட்டாரத்தில் பேசப்பட்டது. பின் இருவரும் அவரவர் பாதையை பார்த்து சென்றுவிட்டனர்.
இந்நிலையில் சிம்ரன் காதலை பற்றி பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் சில விசயங்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது முன்னணி நடிகையாக இருக்கும் போது பல பேர் சிம்ரனை காதலித்ததாகவும் சிலரை சிம்ரனும் காதலித்திருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் அவர் திருமணம் செய்து கொண்ட தீபக் பாஹாவை கூட காதலித்து தான் திருமணம் செய்து இரு மகன்களை பெற்றெடுத்தார் சிம்ரன் என்றும் தெரிவித்துள்ளார். உச்சத்தில் இருந்த சிம்ரன் மிகப்பெரிய நடிகர்களுடன் சேர்த்து வைத்து பல வதந்திகள் பரவியது. அதில் கமல் ஹாசனும் ஒருவர் என்று பகிர்ந்திருக்கிறார் சித்ரா லட்சுமணன்.