நடிகைகளை தேர்ந்தெடுக்கும் நடிகர்கள்.. இப்படியெல்லாம் நடக்கிறதா! நடிகை டாப்சி கொடுத்த ஷாக்
பாலிவுட் முதல் கோலிவுட் வரை தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளவர் நடிகை டாப்சி. இவர் தமிழில் வெளிவந்த ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானார்.
பின் அஜித்துடன் ஆரம்பம், ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா ஆகிய படங்களில் நடித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் தான் இவருடைய திருமணம் நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் Dunki மற்றும் Judwaa 2 ஆகிய படங்களில் நடிப்பதற்காக அதிக சம்பளம் வாங்கியதாக இணையத்தில் தகவல் பரவியது. அதற்கு நடிகை டாப்சி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது :
"Dunki மற்றும் Judwaa 2 படங்களில் பணத்திற்காக நடித்ததாக மக்கள் நினைக்கின்றனர். ஆனால், அது உண்மைக்கு நேர்மாறானது. அந்த படக்குழு நான் அதிக சமபலம் பெறவில்லை" என கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மேலும் பேசிய அவர் "இப்போதெல்லாம் தன்கண்கள் படங்களில் ஹீரோயின் யார் என்பதை ஹீரோக்கள் தான் முடிவு செய்கிறார்கள்.
இது நமக்கு தெரிந்த விஷயம் தான். அதில் சிலர் டிரெண்டிங்கில் இருக்கும் ஒருவரையும் அதிக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒருவரையும் நடிக்க வைக்க நினைப்பார்கள். சிலர், தங்களை விட சிறிய நடிகைகளை நடிக்க வைக்க விரும்புவார்கள்" என தெரிவித்துள்ளார்.